Arun V Vijayan   (அருண் வி விஜயன்)
28 Followers · 44 Following

பறந்து திரியும் காகிதங்களில் பத்திரமாய் எனது வரிகள்...
Joined 13 December 2020


பறந்து திரியும் காகிதங்களில் பத்திரமாய் எனது வரிகள்...
Joined 13 December 2020
5 OCT AT 13:14

"A new day begins — a fresh chance to rise. You’ve got one more day… make it count. Do it again!"

-


7 AUG AT 1:55

ஒரு மாறுதலுக்காக...

ஒரு மாறுதலுக்காக சில நேரம் சிரியுங்கள்..
ஒரு மாறுதலுக்காக பிடித்ததை செய்யுங்கள்..
ஒரு மாறுதலுக்காக
கோபத்தில் மௌனம் கொள்ளுங்கள்..

ஒரு மாறுதலுக்காக;
யாரையாவது நேசியுங்கள்.
இந்த கணத்தில் இந்த அறையில்
யாரோ ஒருவர் யாரையோ நேசிப்பது போல் சத்தமில்லாமல்..

ஒரு பூவை பிடுங்கி தான் ரசிக்க வேண்டும் என்ற
கட்டாயம் ஏதும் இல்லை..

அது செடியில் மலரட்டும்
வாசம் வீசட்டும்.
வாடி மடியட்டும்..

நேசமும் அப்படித்தான் மனிதர்களை அவர்களாகவே
ஏற்றுக் கொள்வதன்றி
நமக்கான வர்களாக மாற்றிக் கொள்வதல்ல

ஒரு அன்பின் கர்ச்சிவ்ஸ் - ஜ
உங்கள் பாக்கெட்டில் வைத்து கொள்ளுங்கள்..
யாரோ சிலரின் கண்ணீர் துடைக்க உதவட்டும்...

மீண்டும்!
ஒரு மாறுதலுக்காக யாரையாவது நேசியுங்கள்!
முடிந்தால் எல்லோரையும் நேசியுங்கள்!

-


27 JUL AT 7:31

இப்போதெல்லாம் அதிகம் சிரிக்கிறேன்..
எல்லோருடனும் பேசுகிறேன்..
சிலர் என்னோடும் பேசுகிறார்கள்..
முன்பை போல் நிசப்தத்தின் தனிமையில் தூங்குவதில்லை..

யார் மீதும் கோபம் இல்லை..
யார் மீதும் வெறுப்பும் இல்லை..

எதையும் அதிகம் சிந்திப்பதில்லை
அதன் போக்கிலே விட்டுவிடுகிறேன்..

ஓர் புல்லாங்குழல் இசைபோல
மென்மையாக வாழ ஆசைப் படுகிறேன்..

எல்லாவற்றையும் தாண்டி எதையோ இழந்திருக்கிறேன்..

மற்றபடி நான் நலமாகத் தான் இருக்கிறேன்..

-


16 OCT 2024 AT 0:59

வழிப்போக்கன் சுவரொட்டியை பார்த்தது போல
நீ என்னை பார்த்திருக்க கூடும்..
அதனால் தான் என்னவோ என்னை நினைவுகூற உன்னால் முடியாது போனது..

ஆனால் நான் ஒரு தேனீர் இடைவேளையில் பாதி முடிவதற்கு முன் பலமுறை உன்னை நினைத்து கொள்கிறேன்..

நாம் காதலித்த நாட்கள் என்று எனக்கு எதுவும் இல்லை..
இருந்தபோதும் உன்னை சந்தித்த நாட்கள் எதையும் மறக்கவில்லை..

போகட்டும்...
யார் உன்னை காயப் படுத்தினாலும் கவலை படாதே..
உனக்கு சாய்ந்து கொள்ள என் தோள் இருக்கிறது..
எனக்கு இந்த சுவர்களை போல..

-


16 OCT 2024 AT 0:56

வழிப்போக்கன் சுவரொட்டியை பார்த்தது போல
நீ என்னை பார்த்திருக்க கூடும்..
அதனால் தான் என்னவோ என்னை நினைவுகூற உன்னால் முடியாது போனது..

ஆனால் நான் ஒரு தேனீர் இடைவேளையில் பாதி முடிவதற்கு முன் பலமுறை உன்னை நினைத்து கொள்கிறேன்..

நாம் காதலித்த நாட்கள் என்று எனக்கு எதுவும் இல்லை..
இருந்தபோதும் உன்னை சந்தித்த நாட்கள் எதையும் மறக்கவில்லை..

போகட்டும்...
யார் உன்னை காயப் படுத்தினாலும் கவலை படாதே..
உனக்கு சாய்ந்து கொள்ள என் தோள் இருக்கிறது..
எனக்கு இந்த சுவர்களை போல..

-


15 FEB 2024 AT 22:57

என்றைக்கோ
நீண்ட வரிசையில்
நமக்கு முன் நிற்ப்பவரில்
உள்ளுக்குள் சின்னஞ்சிறு
பொறாமை இருந்ததென்றல்
நாம் அத்தனை
நேர்மையானவரோ அவ்வளவு நல்லவரோ
ஒன்றும் கிடையாது..
பிறருக்காக எடுத்த முடிவுகளுக்கு
வருந்திக் கொள்ள..

உனக்கு சரியானதென
எதை நம்புகிறாயோ
அதையே செய்!
அது தவறெனும் போது
திருத்திக் கொள்ளலாம்..

இந்த பிறப்பே
தவறுகளால்
பிணைக்கப்பட்டது தானே!

-


15 FEB 2024 AT 22:48

சில நேரங்களில்
தப்பான முடிவுகள்
எடுக்கலாம் தப்பில்லை..
காரணம்
நீ அவ்வளவு புத்திசாலி
ஒன்றும் கிடையாது..
எல்லாவற்றிலும் சரியானதை
தேர்ந்தெடுக்க..
உனக்கு திருத்திக் கொள்ள
இன்றளவும்
வாய்ப்பு உள்ளபோது
ஒரு நாள் முட்டாள்தனம்
செய்ததில் தவறொன்றுமில்லை

-


13 FEB 2024 AT 11:56

இத்தனை
போராட்டங்களுக்கு
நடுவிலும்
ஒரு நொடி உன்னால்
சிரிக்க முடிந்தது
என்றால்
வாழ்க்கை அத்தனை
கொடியதல்ல!
தூரல் இட்டுக்கொண்டு
செல்லும் மேகம் போல்
சிலநேரங்களில்
இழைப்பாறு,
நம்பிக்கை வை,
அழுது கண்ணீர் விடு,
சிரித்து மகிழ்,
பூமி உன்னை
மீண்டும் மீண்டும்
புதுப்பித்துக் கொள்ளும்...

-


1 JAN 2024 AT 0:29

எல்லாமும் எல்லாருக்கும்
இனியாவது சமமாகட்டும்!
எல்லா துன்பங்களும் இன்றோடு
விட்டு விலகட்டும்!
மீண்டும் புதிய 365 நாள்கள்!
வாழ்வோம் நமக்காக மண்ணில்
வீழ்ந்து மடியும்வரை🥂

இப்படிக்கு உங்கள் வருடம் 2024🌺🌺

-


31 OCT 2023 AT 1:21

கொஞ்சமாவது என்மீது அன்பிருந்திருந்தால்
இத்தனை நாட்களில் ஒருமுறையாவது
என்னோடு பேசியிருப்பாய்..

நானாக தேடிவந்த போதெல்லாம்
கடமைக்காக பேசியதற்க்கும்
என் நன்றிகள்..

மீண்டும் மீண்டும் இதயத்தில் எங்கோ
ஒரு மூலையில்
உன்னோடு பேசிக்கொள்ள ஆசைத்தொற்றிக் கொள்ளும்..
ஆனால் என்ன செய்ய சில நேரங்களில்
சுயமரியாதை என்னை தடுத்து கொள்கிறது..

ஆமாம்!, அன்பில் சுயமரியாதைக்கு இடமில்லை தான்..
ஏனோ! என்னில் இருந்து விலகி இருக்க
காரணங்கள் இருக்கும்
உன்னை நெருடலாக்கி
என்னை காயப்படுத்த
மனம் ஏற்க்கவில்லை..

எங்காவது உன்னை சந்திக்க நேர்ந்தால்!
நான் பேசாமல் போனால்
மன்னித்துவிடு!
உன்னை காயப்படுத்த அல்ல..
எனக்கும் காரணங்கள் உண்டு..

-


Fetching Arun V Vijayan Quotes