நாளைய சமுதாயம்
நீ காண விரும்பும் மாற்றத்தின் முதல் தொடக்கம் உன்னிடமே...
நீ எரிகிற விளக்காக இரு அப்போதுதான் மற்ற
விளக்குகளை ஏற்ற முடியும் பிறர் பாரத்தை தாங்க கை கொடு
உன் பாரம் தானே குறையும் தன்னம்பிக்கை கொள்பவனாய் இரு தடம் மாறுபவனாகாதே!
சிலருக்கு செவி கொடுப்பவனாய் இரு பலருக்கு குரல் கொடுப்பவனாகாதே!
சிந்தனை செய்பவனாய் இரு சிதைந்து செல்பவனாகாதே! நாளைய சமுதாயம் நீயானால்
உன் ஒழுக்கம் நாட்டின் கவலைகளுக்கு எதிரி
உன் துணிவு நாட்டின்
அச்சத்திற்கு எதிரி
உன் அறிவு நாட்டின்
குழப்பத்திற்கு எதிரி
நாளைய சமுதாயம் இளைய தலைமுறை என்பது மெய்யானால் இளமை குன்றாது!-ஆம்
நாளைய சமுதாயம்
வேகமாக வருகிறது
பேருந்து படிகளில் நின்றபடி...
கவிதாயினி.திவ்யா-
புத்தகப் பக்கத்தை
புரட்டிபோடுகையில் பு(தெ)ரிகிறது வாழ்க்கையின் எதார்த்தம்
கவிதாயினி.ப.சக்தி
-
பள்ளிக்கூட நட்பு
அன்று பள்ளியில் கூட்டுப் பறவையாய் இருந்தோம்!
இன்று கூட்டை விட்டு திசை மாறி பறக்க தயாரானோம்!
அன்று நண்பர்களுடன் ஒன்றாக கைகோர்த்து நடந்த மாலை பொழுதெல்லாம் தேய்ந்தது...
அன்று பள்ளி சாலையில் ஓரமாக அமர்ந்து பேசிய நாட்கள் எல்லாம் ஓட்டம் பிடித்து ஓடியது...
அன்றைய வகுப்பறையின் ஞாபகங்கள் வசந்தமாக தெரிகிறது..
அன்று அரவணைத்த கைகளெல்லாம் இன்று
அழுதுகொண்டே பிரியாவிடை தருகிறது...
அன்று நண்பர்களுடன் கழித்த பொழுதெல்லாம்...
வாழ்க்கை பயணத்தில் மலரும் நினைவாய் தொடர்கிறது...
கவிதாயினி.திவ்யா-
#தம்பி!
"நீ" எதையும்
"மார்க்"குக்காக படிக்காதே!
ஆனா,
"மார்க்"இல்லாமா
"படிப்பே"இல்ல
என்பத "மறக்காதே!
நான் பேசறது தவறா?
என்பது எனக்கு தெரியாது!
ஆனால்,
தவறா? பேசக்கூடாது
என்பது மட்டும் தெரியும்.
"தோல்வி"என்பது
"சோகமாக" இருக்கலாம்
அந்த "சோகத்தை"
"சுகமாக" மாற்றுவது
"வெற்றி"தான் என்பதை
மறவாதே!
#இங்கே!
எல்லாம் தெரிச்சவாங்கன்னு யாருமில்ல!
தெரிச்ச மாதிரி இருக்காங்கோ! எல்லாம்!
"வாழ்க்கைக்கு" கல்வி அவசியம்-ஆனால்
"கல்வி"மட்டும் "வாழ்க்கை" ஆகாது!-
தமிழ்
என் தாய் மொழியும் தமிழ்தான்!
நான் பேசுவதும்
தமிழ்தான்!
மொழியில் சிறந்த மொழியும் தமிழ்தான்!
என்னை உயர்த்துவதும் தமிழ்தான்!
என்னை உயர்த்தி பெருமைகளை கொடுத்ததும் தமிழ்தான்!
என் உயிரிலே கலந்ததும் தமிழ்தான்!
இப்படிப்பட்ட தமிழை நான் விடமாட்டேன்!-ஆம்
என் உயிர் போகும் வரை அல்ல
என் உயிரே போனாலும்
தமிழ் வாழும் வரை...
கு.ஹேமப்பிரியா-
உங்கள் குழந்தைகளுக்கு நூலகத்தின் கதவை திறந்து விடுங்கள் அவர்கள் உலகத்திற்கே வழிகாட்டுவார்கள்...
உங்கள் குழந்தைகளுக்கு புத்தகத்தின் அருமையை உணர்த்துங்கள் அவர்கள் புத்தகத்தின் பெருமையை
உலகறிய செய்வார்கள்...-
கல்வியின் சிறப்பு
அன்பை சொல்லிக் கொடுத்ததும் கல்வியே!
ஆக்கத்தை வளர்த்ததும் கல்வியே!
இனிய சொற்களை பேச வைத்ததும் கல்வியே! ஈகையை வளர்த்ததும் கல்வியே!
உண்மையை உரைத்ததும் கல்வியே! ஊக்கத்தை வளர்த்ததும் கல்வியே!
என்றும் எனக்கு வேண்டும் கல்வியே! ஏற்றத்தை தந்ததும் கல்வியே!
ஐயத்தை போக்கியதும் கல்வியே!
ஒற்றுமையை வளர்த்ததும் கல்வியே! ஓடி விளையாட சொல்லி தந்ததும் கல்வியே! ஔவையை அறிமுகம் செய்ததும் கல்வியே! அஃதே கல்வியின் சிறப்பு!
கவிதாயினி.ஜெ.ஆனந்தி-
தாயே! என் உயிரில்
கலந்தவள் நீயே!
உன் பாசத்தால்
வளர்ந்தவள் நானே!
தாயே! நீ இன்றி நானில்லை
நான் இல்லாமல் நீ இல்லை
#அம்மா
கவிதாயினி.ராகினி-
கல்வியின் சிறப்பு
அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் தான் கல்வி!
அறிவு எனும் பெட்டகத்தை திறக்க உதவும் ஒரே சாவி தான் கல்வி!
அறியாமையை அகற்றி அறிவை காட்டும் அற்புத விளக்கு தான் கல்வி!
இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி பயணிக்க உதவும்
ஆயுதமே கல்வி!
கவிதாயினி.சீ.ஜனனி-