இடைவெளியில் என்ன இனிமை கண்டாய் - நீ
இடம் அறிந்தும் என்னை இடரில் இட்டாய்
முயல்வதையே தினம் முறையாய் தர - உன்
முகம் அதனை ஏன் மறைத்து விட்டாய்...-
Arivalan
(Arivalan)
39 Followers · 3 Following
23
CSE
Zoho
Taken
Trichy-21
Eternal Reality
Boredom Writer✍️
Both English and Tamil
Sri Ramakrishn... read more
CSE
Zoho
Taken
Trichy-21
Eternal Reality
Boredom Writer✍️
Both English and Tamil
Sri Ramakrishn... read more
Joined 20 July 2018
15 HOURS AGO
5 JUN AT 21:26
கண்ணில் நித்தம் கண்டிருந்தேன்
கண்மணி உன் காற்குழலை
எந்தன் முகம் மேல் படர
எண்ணம் சூழும் தேன் மழையை...-
4 JUN AT 23:23
சில நேரம் சிரிக்கின்றாய்
மறு வேளை வதைக்கின்றாய்
ஒரு சிறையின் இருள் போல் என்னை
சிதைக்காதே அன்பே...-
3 JUN AT 23:11
கண் தேடும் தூரம் கடந்துவிட்டேன்
என் முன்னே ஏனோ நீ இல்லை
கண்ணீரை கொஞ்சம் கசிந்துவிட்டேன்
எல்லைகள் இன்னும் நீளவில்லை-
2 JUN AT 23:40
நீண்டதொரு கதை கேட்க
நின் மொழி வேண்டி நின்றேன்
நீரினுள் நிலம் போல
நிதர்சனம் மறைத்து நின்றேன்...-
31 MAY AT 22:08
கண்மூடி கதைக்கையிலே
என் கல் நெஞ்சு கரையுதடி
கைக்கோர்த்து நடந்திடவே
என் கண்ணீரும் மறையுதடி...-
30 MAY AT 23:27
தென்றல் உன்னை தேடி தேடி
எந்தன் நெஞ்சை நாடியதே
தேனே நீ தான் வேண்டும் என்று
என்னுள் நின்று வாடியதே...-
29 MAY AT 23:11
விரைவில் உன்னை காணும் வேட்கை
விழியில் நித்தம் வந்து செல்ல
விடியும் காலை நொடியில் இருந்தே
வியப்போடு காத்திருந்தேன்...-