Arivalan   (Arivalan)
39 Followers · 3 Following

read more
Joined 20 July 2018


read more
Joined 20 July 2018
15 HOURS AGO

இடைவெளியில் என்ன இனிமை கண்டாய் - நீ
இடம் அறிந்தும் என்னை இடரில் இட்டாய்
முயல்வதையே தினம் முறையாய் தர - உன்
முகம் அதனை ஏன் மறைத்து விட்டாய்...

-


5 JUN AT 21:26

கண்ணில் நித்தம் கண்டிருந்தேன்
கண்மணி உன் காற்குழலை
எந்தன் முகம் மேல் படர
எண்ணம் சூழும் தேன் மழையை...

-


4 JUN AT 23:23

சில நேரம் சிரிக்கின்றாய்
மறு வேளை வதைக்கின்றாய்
ஒரு சிறையின் இருள் போல் என்னை
சிதைக்காதே அன்பே...

-


3 JUN AT 23:11

கண் தேடும் தூரம் கடந்துவிட்டேன்
என் முன்னே ஏனோ நீ இல்லை
கண்ணீரை கொஞ்சம் கசிந்துவிட்டேன்
எல்லைகள் இன்னும் நீளவில்லை

-


2 JUN AT 23:40

நீண்டதொரு கதை கேட்க
நின் மொழி வேண்டி நின்றேன்
நீரினுள் நிலம் போல
நிதர்சனம் மறைத்து நின்றேன்...

-


1 JUN AT 23:50

ஏன் இந்த தாமதம்
எனை சேரா காரணம்
எதிர்பாரா நேரங்களில்
எனை நீங்கும் மோகனம்...

-


31 MAY AT 22:08

கண்மூடி கதைக்கையிலே
என் கல் நெஞ்சு கரையுதடி
கைக்கோர்த்து நடந்திடவே
என் கண்ணீரும் மறையுதடி...

-


30 MAY AT 23:27

தென்றல் உன்னை தேடி தேடி
எந்தன் நெஞ்சை நாடியதே
தேனே நீ தான் வேண்டும் என்று
என்னுள் நின்று வாடியதே...

-


29 MAY AT 23:11

விரைவில் உன்னை காணும் வேட்கை
விழியில் நித்தம் வந்து செல்ல
விடியும் காலை நொடியில் இருந்தே
வியப்போடு காத்திருந்தேன்...

-


28 MAY AT 22:15

விடியாத வானம் என்
வினையாக ஆனதே
விளையாட நீ இன்றி
விதி மாறி போனதே...

-


Fetching Arivalan Quotes