இன்றளவும் அவள்,
ஒரு புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் எடுக்கத் தயங்குகிறாள்.
நால்வரின் எட்டு கண்களும் தன்னையே பார்ப்பது போல் குறுகி நெளிகிறாள்.
வெறிச்சோடியிருக்கும் சாலைகளை தனியாக கடக்க பயந்து துணைத்தேடி நிற்கிறாள்.
போதுமான வெளிச்சம் இல்லாத அந்த பேருந்து நிலையத்தை பார்க்கும் போதெல்லாம் குலை நடுங்குகிறாள்.
பிள்ளைகள் பெற்றுவிட்டாள், பெருவாழ்வை கழித்துவிட்டாள்,
இன்னமும் உடலெல்லாம் வியர்த்து, கதறி எழுந்து, ஒரு கெட்ட கனவை கடக்கிறாள் நாளொன்றிற்கு இரண்டென !
-