கனவு காண்கிறாள் கண்ணாளனின்
குழந்தையின் சாயல்
எப்படி இருக்குமோ.. என்பதை பற்றி.-
அபிராமி
(🌛நிலவின்மகள்🌜)
133 Followers · 63 Following
காலம் யாவும் தொடர்ந்திடும் தொப்புள்
கொடியாய் ஓருறவாய்
நீ வேண்டுமே....!
கொடியாய் ஓருறவாய்
நீ வேண்டுமே....!
Joined 12 April 2019
17 APR AT 21:30
19 MAR AT 21:59
ஆதியும் அந்தமும்
அவள் என்றான்.
ஆனாலும்
அவளுக்கென
எந்தவொரு
முக்கியத்துவமும்
இல்லை-
26 DEC 2024 AT 20:15
சிறு தூறலாக
தான் நினைத்ததை
எழுத தொடங்கினேன்.
பெரு வெள்ளமென
வந்து கொட்டுகிறதே
எழுத்துக்கள்.
என்ன செய்ய
இத்தனை அன்பு கொண்ட
இந்த தமிழ் மொழிக்கு.
அவளை உணர்வதை தவிர.-
26 DEC 2024 AT 18:29
உன்னுடனான உரையாடல்
இல்லாத பொழுதும்
உன் நினைவுகளை
மட்டுமே மனம் அசைபோடுகிறது
அவளே அவளை அறியாமலே.-
26 DEC 2024 AT 18:20
இசை தானே என்று
சொல்பவர்களுக்கு
எப்படி சொல்வது
இவளின் நிகழ்காலத்தை
மட்டுமின்றி
இவளின்
மொத்த வெறுமையும்
போக்கும் துணையே
இசை என்பதை-
26 DEC 2024 AT 17:50
எப்படி புரிய வைப்பது
இந்த மர மண்டைக்கு.
அவன் பார்வை இன்று
இவள் மேல் விழவில்லை
என்பதை.-