நீ அழகு... நின் விழி அழகு...
உன் மொழியும் அழகு....
பிழை உன்மீதென்றால், நீ தரும்,
உந்தன் உருட்டல்கள் ஓர் அழகு கண்மணி..❤️-
உன் விரல் தீண்டும் நொடியில்
உடைந்து தூளாகித்தான் போகிறோம்...
நீ பிடித்து எழுதும் சாக்பீஸும்...
நானும்...-
இன்றைய சிரிப்பிற்காக நாளை
அழுவேனோ தெரியாது...
நேற்றைய அழுகைக்காக இன்று,
இன்னும் கொஞ்சம் சிரித்துக் கொள்கிறேன்...-
வேண்டாமென பிரிவு செய்த பின்னும்
உன் நினைவில் கிடத்தல் ஏனென கேட்கிறாய்..
நனைக்க பாதங்கள் இல்லாத போதும்,
கரைக்கு அலைகள் வருவதில்லையா கண்மணி...!-
கோபமாய் சட்டென திட்டிவிட்டு,
பின் வருந்தி புலம்புகிறாயே... ஏன்?
நேசத்திற்குப் பழக்கி, என்னுள் பிரியங்களை நிரப்பியவள் நீ கண்மணி...
பெரும் கடலொன்றில்
தீக்குச்சிகள் தானே வீசுகிறாய் நீ....-
துயர் நிறை வாழ்வுக்கு,
சிறையாகி போன உயிரொன்றை,
சிறகு பொருத்தி பறக்கச் செய்யும்
பெருங்காதலை, கொண்டாடித் தீர்க்க
தனியாய் நாளொன்று வேண்டுமா கண்மணி...?-
இதழ்கள் எட்டாத் தொலைவினில் இருக்கையில்,
அவள் பார்வையால் முத்தமிடுகிறாள்...-
மழை நாளொன்றில்
குடையோடு நீ வருவாய்
என நின்றேன் நான்
நீயோ வரவில்லை....
ஏன் அன்று வரவில்லை
என்றுனை நான் கேட்க,
மழையாக நான் வந்தேன்
என்று சொல்லி சிரிக்கின்றாய்....-
பெருமழை கொட்டிட,
கான்கிரீட் வீட்டினுள் காபியோடு
கவி புனைந்தான் கவிஞன்...
விதைத்தவன் வரமென்றான்...
சாலையோர வியாபாரியோ,
சபித்து கொண்டிருந்தான்....-