ஒரே வகை உணவானாலும்
அதன் ருசி ஒன்றுபோல்
இருப்பதில்லை அது
உண்டாக்கும் நபரின்
அன்பினை பொறுத்து சுவை
மாறுகிறது..!
ஆதலால் தான் அவள் கையால்
தரும் வேப்பங்கூட்டு கூட
அமிர்தமாய் இனிக்கிறது….!
❤️ 🍲 ❤️-
முதல் இழப்பு : தந்தையின் பிரிவு.
என்னைப்பற்றி நான் பு... read more
உன் பொற்பாதங்களை
தாங்கிப்பிடிக்கும் போதெல்லாம்
என் இதயம் எனது
உள்ளங்கைக்கு வந்து
உனை தாங்க நினைக்கிறது
மென்மையை மென்மையால்
ஏந்திப்பிடிக்க..!
💕 🦶 ❤️-
என் அன்பின் வெளிப்பாடாய்
உன் பாதம் தாங்கும் என்
கைகள் என்றென்றும்..!
💕 🦶 💗-
உயிரென உருகி உள்ளமென கலந்து உறவுகளிடையே கோபமும் அதன் வார்த்தைகளும் வீரியமின்றி போவதில் அடங்கியுள்ளது கடலளவு கொட்டித்தீர்க்கும் அன்பு
-
வெளிர் மஞ்சள் நிலவே நீ மாநிறமாக மாறிவிடு என் மனம் கவர்ந்தவளின் அழகு முகமாக..!
என்னவளின் அழகினை நான் இரசிக்க நீ மட்டுமே இருக்கிறாய் என் அனாதரவற்ற இரவுகளில்-
அவளே அதிசயமெனக்கு அதில் அவளின் வெட்கத்தை அதிசயமென பிரித்தறிய மாட்டேன் மாறாக பேரதிசயங்களின் ஒற்றை உணர்வு அது என தீரா ஆசை கொண்டு அதை இரசிப்பேன்
-
உனக்கென கொய்த அன்பின் உருவான மாலைகள் உன் தோள்களில் தவழ தவமிருந்து தகிக்கின்றன, காலமும் நேரமும் கனிகின்ற நாள் நோக்கி
-
எல்லாப் பறவைகளும்
பறந்தே ஆகவேண்டுமெனும்
கட்டாயங்கள்
ஏதுமில்லை.
சிலதுகள் அவளிடன் சரணாகதி அடைந்தும் கிடக்கலாம் சுய விருப்பத்துடன்.-
சில நாட்களின் இரவுகள் மட்டும் ஏனோ நீண்டு விடுகிறது அவளின் நினைவுத் துணையின்றி
-