ஆகாயகங்கைக்கு
அகவை தின வாழ்த்துகள்.-
பாட்டி சொன்ன தேவதைகள்
இன்று என் கனவுகளில்
நேசப்பூக்களின் ஆழத்தை
அளந்து காட்டுகிறது
என் உறக்கத்தில்.-
தான்
வாழ்க்கை இனிக்கிறது
கற்பனை நினைவுகளுடன்
வண்ணங்களை அள்ளித்
தெளித்து..
வர்ணனைகளை வாரி
இறைத்து...-
உன் வேல்விழியால்
என் இதயத்தைக் கிழித்து...
ஊசி நூல் கொண்டு தைப்பது
உனக்கே நியாயமா...?
உன் இதயத்தை என்
இதயத்திற்கு இடம் மாற்று
அறுவை சிகிச்சையின்றி
காயம் ஆற்ற..-
அழகான விடியல்
அள்ளித் தெளிக்கிறது
மனதின் புத்துணர்வாய்
மகிழ்வின் பொலிவாய்
இனிமையின் விடியலாய்
குதூகலங்களின் எழிலாய்
மீட்டுகிறது என்னையே..
உற்சாகத்தை உள்ளத்தில்
ஊற்றியே.-
நான் இருக்கிறேன் என்று என்
முன்னே வந்து கை கொடுக்கிறது
என் கனவு வழி வந்த கற்பனைகள்
அழகாக கவிதை எழுதச்சொல்லியே.-
தாய்மையை அறியாதவர்கள்.
இரக்கங்களை ஓரங்கட்டியவர்கள்.
தன் சுகங்களை தவிர வேறு
நினைவு இல்லாவர்கள்.
எவர் எப்படி போனால்
நமக்கென்ன என்ற
குறுகிய மனப்பான்மை
கொண்டவர்கள்.-