யாரோ ஒருவர் உண்மையை சுமந்துக் கொண்டே
வாழ செய்கிறார்கள் மற்றொருவரை ...
எல்லோரையும் காயப்படுத்தும்
அவ்வளவு மோசமான மனிதம் இன்னும் வரவில்லை ...!-
பிடிக்காதையும்
பிடிக்க செய்யும் சமூக வாழ்க்கை ...
ஆனாலும்
பிடிச்சதையும் அதை விட
பிடித்து ஜெயிக்க செய்யும்
என் வாழ்க்கை ....!
-
சிறுமி ஒருத்தியாக
இருந்த நாழிகை...
ஊர் திருவிழா என்பதன்
அர்த்தம் என்பதெல்லாம்
தெரியாது...
அத்தை வருவாள் ...
மாமா காசு தருவான் ...
மாமன் மகன் மகளுடன்
ரோஸ் மிட்டாயை
உதட்டு சாயம் கொண்டு
உறவில் மகிழ்ந்து
கறி சோறு தின்று
புது துணியும்
அணிந்து
ராட்டினம் சுற்றிய போது
மேலிருந்து
உலகமே காலடியில்
என வியந்த தருணம்
நினைவில் நிறைந்திருக்கும்
நெஞ்சத்தில்....!
-
அன்பென்றால்
கொடுக்க தான் வேண்டுமே தவிர
திரும்ப வர வேண்டும் என்றில்லை
அது போல தான்
இங்கே பேரன்பு பல
வாழ்ந்து கொண்டு இருக்கிறது ...
-
கற்றதை எல்லாம்
விடியல் வந்தும்
அறியா புள்ளையாய்
அவனின் மார்போடு மண்டியிட
செய்கிறது காலத்தால் அழியா
அக்காதல்...!-
காலையில் சண்டையிட்ட
சொற்கள் எல்லாம்
விடுமுறையில் செல்ல
அனுமதி கேட்கவே
செய்கிறது ...!-
பேசும் இதயங்களுக்கிடையே
வார்த்தைகளில்லா
அரங்கேற்றம் ஆகும்
கவிதைகள் பல ...
அவனின் காதலில்
அவளுள்ளே...!-
பேசா வாய்க்கு
வாய்ப்பு தருவதாக
அமைந்து விடுகிறது
விடை பலதை
வினாக்களுக்கு முன்னே
தந்து விடுகிறது ...!-