வந்து கலந்திடு..
-
There is nothing in this world that is inanimate. Every object near you is a reminder of some person or their act!
-
அருவியாய் மனம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது உன் பார்வை தீண்டுகையில்!
-
தீராத கண்ணீரும் தீர்ந்துவிடும்
உன் அருகினில் நான் இருக்கையில்..-
அவன்: தேடாத தனிமையும் நீயே..
அவள்: என்றும் உன்னில் நானே..
அவன்: மனதை வாட்டிடும் தீயே..
அவள்: அனைத்திடும் குளிர் பனியும் நானே..
அவனும் அவளும்: கனவுகள் இல்லாத நாளே
என் வாழ்வினில் இல்லை மானே!-
அவன் மௌனம் கூட நகைக்கின்றது இப்போது என் விழிகளின் நடனங்களை கண்டு..
-
மனதோடு நீ தந்த வலிகள்,
காதலோடு நீ தந்த காயங்கள்,
இவை இரண்டும் தருமென ஏங்கினேன் உன்னோடு நான் வாழும் தருணங்களை!-
மாறினாய் மாற்றினாய்
நீங்கினாய் நீக்கினாய்
தேடினாய் தேடலாய் மாறினாயே..
நான் தேடாத அர்த்தங்கள் நீ
மொழி பாடாத வரிகள் நீ
விண்ணில் தேய்ந்தது உன் கர்வம்
மண்ணில் உன்னை சேர்ந்தது என் மனம்
கரைந்தேன் உன்னால்
பறந்தேன் உன்னால்
உன் அருகிலும் உன் தொலைவிலும்-
மறுமுறை வாழ்க்கை தருவாயன
விழிகள் கேட்கும் உன்னிடம்
மனதிலோ நீ சென்ற வழித்தடம்
மௌனம் ஒன்றே நீ விட்டு சென்ற பொக்கிஷம்
விழித்தேன் உன்னால்
மடிந்தேன் உன்னால்
உன் அருகிலும் உன் தொலைவிலும்..
கேட்கும் நொடியில் நீ இல்லை
வாழும் ஆசை எனதில்லை
மீண்டும் சிறு புன்னகை வீசிச் சென்றிடு
மறுமுறை வாழ கற்று தந்திடு
வாழ்வேன் உன்னால்
வீழ்வேன் உன்னால்
உன் அருகிலும் உன் தொலைவிலும்..-