மனதிற்குள் நித்தமும் கேட்கின்றன பல வகையான இரைச்சல்கள்...
அவை சில நேரம் இனிய கீதங்களாகவும் உள்ளன குமுறல்களாகவும் உள்ளன ஏக்கங்களாகவும் உள்ளன...
-
மனதிற்குள் நித்தமும் கேட்கின்றன பல வகையான இரைச்சல்கள்...
அவை சில நேரம் இனிய கீதங்களாகவும் உள்ளது குமுறல்களாகவும் உள்ளது ஏக்கங்களாகவும் உள்ளது...
-
காய்ந்துப்போய் தன் அழகையெல்லாம் இழப்போம் என்று தெரிந்தே, நிலத்தின் மீதுள்ள காதலால் உதிர்ந்தது மரத்தில் பிறந்த அந்த மலர்...
-இவளின் எழுத்துக்கள்-
கொட்டித் தீர்க்கும் மழை வெள்ளமாக வந்து துன்புறுத்துகிறது
பொய்த்துப் போன மழை பஞ்சமாக வந்து வாட்டியெடுக்கிறது
அன்பை மிகுதியாக வெளிப்படுத்தினாலும்,
அறவே வெறுத்து ஒதுக்கினாலும் ஒன்றுதானே...
- இவளின் எழுத்துக்கள்-
தாமரை மொட்டு விரிவது போல் விரிந்த உன் இதழ்கள் பூத்த புன்னகையும்,
இதழ்கள் பூத்த புன்னகையால் வில் போல் வலையும் உன் கண்களும்,
வறட்சியான பாலை நிலம் போல் இருக்கும் என் இதயத்தில் காதல் மழையை பொழிந்தது...
காதல் தாகத்தை தனித்த மேகமே
வானின் மேகம் கலைவது போல் நீயும் கலைந்து போவாயா?...
-இவளின் எழுத்துக்கள்
-
என்னிடத்தில் என்னருகில் நீ இல்லையென்றாலும்
நீ இருப்பதாகவே மனம் எண்ணுகிறது,
உன் கண்கள் என்னையே நோக்குவதாக தோன்றுகிறது...
-இவளின் எழுத்துக்கள்-
மாலை இளவெயில் நேரம்,
பேருந்தில் ஜன்னலோரப் பயணம்,
பேருந்து ஒலிபெருக்கியில் பிடித்த பாடல்,
பாடலின் வரியை முணுமுணுத்தது இதழ்கள்,
பேருந்து சென்றுக் கொண்டிருந்தது வானில் பறவைகள் போல்,
ஜன்னலின் வழி வந்த காற்று வருட, கேசமும் விரிந்தாடியது என் மனம் போல்....
-இவளின் எழுத்துக்கள்-
தனிமையில் வெறுமையானது இதயம்
இதயத்தில் நீ நுழைந்ததால் அது கனமானது
கனமானதால் தாங்கமுடியாமல் விழுந்தேன்
விழுந்த என்னை மீட்க வருவாயா நீ
நீயே என் அந்தாதி
-இவளின் எழுத்துக்கள்-
அவன்: சிறைப்படுத்துவது அவளென்றால் அச்சிறையும் சிங்காதனமே...
அவள்: அதிகாரப் போர்வையால் பாசாங்கு செய்து அகத்தில் ரசித்தேன் என் இதயமாகிய சிறையில் வீற்றிருக்கும் அவனை...
- இவளின் எழுத்துக்கள்-
கண்ணோடு கண் கலக்கவில்லை,
உன் பெயரை கண்டாலே விரியும் என் விழி
என் அருகில் நீ இல்லை,
உன் நினைவுகளே என்றும் என் இதயக் குழியில்
உன் கைகோர்க்கவில்லை,
கைப்பேசியிலே தான் என் விரல்கள் தீண்டின உன் புகைப்படம் தேடி
நீண்ட நேரம் கதைக்கவில்லை,
குறுஞ்செய்தியிலே தான் ஒற்றை வரி அனுப்பினேன் அரிதாக...
-இவளின் எழுத்துக்கள்
-