வாட்ஸ்அப் இயங்காமல் தவித்த
உலகதை எதார்த்தமாக வேடிக்கை
பார்க்கிறேன்
எதிரில் இருப்போர் எல்லாரிடத்தமும்
உனக்கா வேலை பார்க்கிறதா உனக்கு
ஆன்லைன் காட்டுகிறாதா என பதற்றம்
அடைவதை ஆச்சரியமாய் காண்கிறேன்
அன் இன்ஸ்டால் செய்து விட்டேன்
அடுத்து இன்ஸ்டால் செய்ய முடியவில்லையே
என்போர் எல்லாரையும் ஏமாற்றமாய்
பார்க்கிறேன்
மணிக்கு 15 முறை ஸ்விட்ச் ஆப் செய்து
ஆன் செய்வோரையும் திடிரென டெலிகிராம்,
சிக்னல் ஆப்களை தரவிறக்கம் செய்வோரையும் ஆச்சரியமாய் பார்க்கிறேன்.
இத்தனை மெனக்கெடல்கள், பரிதவிப்பு , அவசரம் , பயம் , பதற்றம் , ஏமாற்றம் , தவிப்பு என பல விதமான உணர்வுகளை பல முகங்களில் இந்த பத்து நிமிடத்தில் பார்த்து விட்டேன்.
ஏன் இத்தனை விதமான உணர்வுகள் ஒரு ஒற்றை ஆப் முடக்கத்தில் , எல்லாரும் எதிர் முனையில் யாரோ ஒருவரை இழந்த விட கூடாது , அவரின் அடுத்த நொடி என்ன என்று தெரியாமல் தவிக்கும் அத்தனை பரிதவிப்புமே அன்பை வெளிப்படுத்தவும், அன்பை பெறுவதற்காகவும் தானே.,
எதிர் முனையில் நம்மை எதிர்பார்த்தோ அல்லது அன்பை அளவில்லாம் அள்ளி வீசுவதற்கோ யாரோ ஒருவர் எல்லாருக்கும் இருப்பார்கள்.
எளிதில் அந்த எதிர்பார்ப்பற்ற எளிய அன்பர்களை இழந்து விடாதீர்கள். அன்பை விதையுங்கள் அகில உலகம் எங்கும் அன்பே விளையட்டும்..!!!!
-