எப்பொழுதும் ஒரு கூட்டமாய்....
கூட்டத்தில் கருப்போ,சிவப்போ,
குட்டையோ,நெட்டையோ
என்ற பாகுபாடுக்கு இடமில்லை....
கூட்டத்தில் இருந்து சிரிப்புகள்
முத்து முத்தாக வானில் தெறிக்கும்...
நம் கஷ்டத்தை கண்டு அழுகைக்கு தோள்
கொடுக்கும் ஒரே உறவுகள்...
என்றும் நமக்காக வாழ்பவர்கள்...
கடவுள் எதிர்பார்க்காமல் ஒரு
சிலருக்கு கொடுத்த வரம் 'நண்பர்கள்'...
இப்பாக்கியம் "தவம்
புரிந்தாலும் "எல்லாருக்கும் அமையாது...
-