அ.க. கார்த்திகேயன்   (அ.க.கார்த்திகேயன்)
14 Followers · 2 Following

Joined 11 November 2018


Joined 11 November 2018

பால் : அறத்துப்பால்
இயல் : துறவறவியல்
அதிகாரம் : 36 - மெய்யுணர்தல்
திருக்குறள் : 360

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமங் கெடக்கெடு நோய்.

விளக்கம் :

விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய மூன்றையும் தவிர்த்தால் துன்பம்
நம்மை நெருங்காது.

-



பால் : அறத்துபபால்
இயல் : துறவறவியல்
அதிகாரம் : 36 - மெய்யுணர்தல்
திருக்குறள் : 359

சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.

விளக்கம் :

எந்த பொருளாயினும் அதன் தன்மையுணர்ந்து ஆசைப்படாமல் இருந்தால் துன்பம் நம்மை வந்து பற்றிக்கொள்ளாது.

-



பால் : அறத்துப்பால்
இயல் : துறவறவியல்
அதிகாரம் : 36 - மெய்யுணர்தல்
திருக்குறள் : 358

பிறப்பென்னும் பேதைமை நீங்கச்
சிறப்பென்னுஞ்
செம்பொருள் காண்ப தறிவு.

விளக்கம் :

மறுப்பிறவி இல்லையென்பதை இப்பிறவியிலேயே நன்காறாய்ந்து அறிவது உண்மையான உணர்வாகும்.

-



பால் : அறத்துப்பால்
இயல் : துறவறவியல்
அதிகாரம் : 36 - மெய்யுணர்தல்
திருக்குறள் : 357

ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.

விளக்கம் :

சான்றோரின் அறிவுரைகளை கேட்டு உண்மை தன்மையுணர்ந்து அதன்படி நடப்பவர்களுக்கு மறுப்பிறவியுண்டு என்று எண்ணவேண்டாம்.

-



பால் : அறத்துப்பால்
இயல் : துறவறவியல்
அதிகாரம் : 36 - மெய்யுணர்தல்
திருக்குறள் : 356

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.

விளக்கம் :

நன்கு கற்று மெய்யுலகத்தை அறிந்தவர்கள் மறுபிறப்பை விரும்பமாட்டார்கள்.

-



பால் : அறத்துப்பால்
இயல் : துறவறவியல்
அதிகாரம் : 36 - மெய்யுணர்தல்
திருக்குறள் : 355

எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

விளக்கம் :

எப்பொருள் எத்தன்மையுடையது என்று வெளித்தோற்றத்தை வைத்து பாராமல் அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து அறிவதே மெய்யுணர்வாகும்.

-



பால் : அறத்துப்பால்
இயல் : துறவறவியல்
அதிகாரம் : 36 - மெய்யுணர்தல்
திருக்குறள் : 354

ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர் வில்லா தவர்க்கு.

விளக்கம் :

உண்மை தன்மைகளை உணரமுடியாதவர்கள் தனது ஐம்புலன்களையும் அடக்கிவைத்திருந்தாலும் பயனேதுமில்லை.

-



பால் : அறத்துப்பால்
இயல் : துறவறவியல்
அதிகாரம் : 36 - மெய்யுணர்தல்
திருக்குறள் : 353

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வான நணிய துடைத்து.

விளக்கம் :

சந்தேகங்களைத் துறந்து உண்மையை உணர்ந்தவர்களுக்கு பூமியைவிட வானம் தொட்டுவிடும் தூரத்திலிருக்கும்.

-



பால் : அறத்துப்பால்
இயல் : துறவறவியல்
அதிகாரம் : 36 - மெய்யுணர்தல்
திருக்குறள் : 352

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.

விளக்கம் :

மாயமயக்கத்திலிருந்து தெளிவான நிலையை அடைந்தவர்கள் துன்பநிலை விலகி இன்ப நிலையை அடைவார்கள்.

-



பால் : அறத்துப்பால்
இயல் : துறவறவியல்
அதிகாரம் : 36 - மெய்யுணர்தல்
திருக்குறள் : 351

பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.

விளக்கம் :

பொருளற்றவைகளை பொருட்டாக நினைத்தால் வாழும்
பிறவியில் துன்பமே நிலைத்திருக்கும்.

-


Fetching அ.க. கார்த்திகேயன் Quotes