பால் : அறத்துப்பால்
இயல் : துறவறவியல்
அதிகாரம் : 36 - மெய்யுணர்தல்
திருக்குறள் : 360
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமங் கெடக்கெடு நோய்.
விளக்கம் :
விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய மூன்றையும் தவிர்த்தால் துன்பம்
நம்மை நெருங்காது.-
பால் : அறத்துபபால்
இயல் : துறவறவியல்
அதிகாரம் : 36 - மெய்யுணர்தல்
திருக்குறள் : 359
சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.
விளக்கம் :
எந்த பொருளாயினும் அதன் தன்மையுணர்ந்து ஆசைப்படாமல் இருந்தால் துன்பம் நம்மை வந்து பற்றிக்கொள்ளாது.-
பால் : அறத்துப்பால்
இயல் : துறவறவியல்
அதிகாரம் : 36 - மெய்யுணர்தல்
திருக்குறள் : 358
பிறப்பென்னும் பேதைமை நீங்கச்
சிறப்பென்னுஞ்
செம்பொருள் காண்ப தறிவு.
விளக்கம் :
மறுப்பிறவி இல்லையென்பதை இப்பிறவியிலேயே நன்காறாய்ந்து அறிவது உண்மையான உணர்வாகும்.-
பால் : அறத்துப்பால்
இயல் : துறவறவியல்
அதிகாரம் : 36 - மெய்யுணர்தல்
திருக்குறள் : 357
ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.
விளக்கம் :
சான்றோரின் அறிவுரைகளை கேட்டு உண்மை தன்மையுணர்ந்து அதன்படி நடப்பவர்களுக்கு மறுப்பிறவியுண்டு என்று எண்ணவேண்டாம்.-
பால் : அறத்துப்பால்
இயல் : துறவறவியல்
அதிகாரம் : 36 - மெய்யுணர்தல்
திருக்குறள் : 356
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.
விளக்கம் :
நன்கு கற்று மெய்யுலகத்தை அறிந்தவர்கள் மறுபிறப்பை விரும்பமாட்டார்கள்.-
பால் : அறத்துப்பால்
இயல் : துறவறவியல்
அதிகாரம் : 36 - மெய்யுணர்தல்
திருக்குறள் : 355
எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
விளக்கம் :
எப்பொருள் எத்தன்மையுடையது என்று வெளித்தோற்றத்தை வைத்து பாராமல் அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து அறிவதே மெய்யுணர்வாகும்.-
பால் : அறத்துப்பால்
இயல் : துறவறவியல்
அதிகாரம் : 36 - மெய்யுணர்தல்
திருக்குறள் : 354
ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர் வில்லா தவர்க்கு.
விளக்கம் :
உண்மை தன்மைகளை உணரமுடியாதவர்கள் தனது ஐம்புலன்களையும் அடக்கிவைத்திருந்தாலும் பயனேதுமில்லை.-
பால் : அறத்துப்பால்
இயல் : துறவறவியல்
அதிகாரம் : 36 - மெய்யுணர்தல்
திருக்குறள் : 353
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வான நணிய துடைத்து.
விளக்கம் :
சந்தேகங்களைத் துறந்து உண்மையை உணர்ந்தவர்களுக்கு பூமியைவிட வானம் தொட்டுவிடும் தூரத்திலிருக்கும்.-
பால் : அறத்துப்பால்
இயல் : துறவறவியல்
அதிகாரம் : 36 - மெய்யுணர்தல்
திருக்குறள் : 352
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.
விளக்கம் :
மாயமயக்கத்திலிருந்து தெளிவான நிலையை அடைந்தவர்கள் துன்பநிலை விலகி இன்ப நிலையை அடைவார்கள்.-
பால் : அறத்துப்பால்
இயல் : துறவறவியல்
அதிகாரம் : 36 - மெய்யுணர்தல்
திருக்குறள் : 351
பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.
விளக்கம் :
பொருளற்றவைகளை பொருட்டாக நினைத்தால் வாழும்
பிறவியில் துன்பமே நிலைத்திருக்கும்.-