அதிகாலையில் ஆதவனுக்கு முன் எழுந்து அங்கம் குளித்து அறுசுவை சேர்த்து அன்னம் சமைத்து அவனுக்கு பரிமாருகையில் அழகாய் கூறினான் - " நீ அரளி விதையில் சமைத்தால் கூட அதை அமிர்தம் என உண்பேனடி - என் அன்பு மனைவியே ! " என்று.....
தூரம் மட்டுமே தூவி கொண்டு இருக்கிறது... அவன் நினைவுகளை துயில் எழுந்தாலும் தூரல் போல உன் வார்த்தைகள் மட்டுமே... தூசி படியா அவன் காதலை காலம் தூக்கி கொண்டு சென்றதேனோ.....
கனவிலும் மறந்து விடாதே உன்னோடு கதைக்கும் வார்த்தைகளை செதுக்கி தான் கவிதை படைக்கிறேன்... உயிருக்குள் ஒலிக்கிறது உளியின் சப்தம்... உணர்வென வெளி வருகிறது உன்னோடு நான் செய்த யுத்தம்.....
நெஞ்சில் கொண்ட நினைவுகளை எல்லாம் நிலவிடம் விட்டு செல்கிறேன் பார்த்துக் கொள் ... ஏன் எனில் உன்னோடு நேரில் உறவாடியதை விட நேரம் போவது கூட தெரியாமல் நடு இரவில் உரையாடியது தான் அதிகம்....
சித்திரம் படைக்க வந்தவன் நித்திரை இழக்க செய்து விட்டான் கடைசி வரை கதைக்கவே இல்லை காரணம் கண்களில் காதல் கசிந்து விடுமோ என்ற பயம் ... ஆனால் தினமும் அவனோடு தித்திக்கும் நினைவுகள் கனவுகளை யாராலும் களவாடா முடியாது ....