நீ இல்லை என்ற இடங்களில் என்னைமீறி எனதுயிரானது.. உன்னைத் தேடத் துவங்கி.. காணும் இடமெல்லாம் கற்பனை செய்து கொள்கிறது.. நிஜமாக நானும் நிழலாக நீயும் பிரியாத நம் காதல் மட்டும் கரம் சேர இயலாத கானலாய்..!
பசுமையின் அழகு பார்வை படும் தூரம்வரைதான்.. அருகில் செல்ல செல்லதான்.. உணர முடியும்.. அதுவரை கண்டது பச்சை போர்த்திய.. புல்வெளியா.. முட்புதர்களா.. என்பது..!
வேலி தாண்டிய மலருக்கு இருந்த நிலையும்.. தாங்கிய கிளைகளும்.. மறந்து போகுமெனில்.. வேர்கள் அவற்றை மன்னிக்ககூடும்.. ஆனால் வேர்களுக்கே தான் உயிரோடி.. உறவாட இடம் தந்த நிலமே.. மறந்து போகிறது என்றால்.... நிலம் எப்படி.. மன்னிக்கக்கூடும்..!