ஒரே நாளில் முற்றிலும் வேறுபட்ட இரு வேறு மனிதர்களை சந்திக்கும்போது தான் என்னடா உலகம் இது என்று வெறுத்த நம்மை கண நேரத்தில் என்னடா உலகம் இது என வியந்து பார்க்கவும் வைக்கிறது எப்போதும் அண்டம் இப்பேரண்டம் ஆச்சரியமானது தானே
தன் சொந்த பணிக்கே நேரமின்மை காரணத்தால் மின்னல் வேகத்தில் சென்ற போதிலும் நின்று உதவிய அந்த முகமரியா மூன்றாம் மனிதனின் உதவி சொல்லாமல் சொல்லியது இறைவன் இருக்கின்றான் என
ஒரு மனிதனையோ உணர்வையும் கடந்து போக விரும்பினால் எப்போதும் ஆக்கிரமிப்பு நிலையில் இரு கடக்கும் பாதை கடினம் தான் வழி தெரியாத வரை, தடம் அறிந்தால் தடுமாற்றம் இன்றி கடந்து செல்வாய்
I have thousands of reasons to quit,walkaway, stepback from my goals but millions of reasons to continue, move forward and work on because my love for my goal is stronger than my excuses
விளக்க முடியாத வெறுமை தாங்கிக்கொள்ள முடியாத தனிமை பகிர முடியாத பிரிவு இவற்றை வாழ்க்கையில் ஒரு முறை கடந்து இருந்தால் வாழ்க்கையை எத்தனை முறை வேண்டுமானாலும் கடக்கலாம்