இயற்கையின் தேவை
யென்றென்றும்
எழில் கொஞ்சும்
வளங்களைக் காக்கும் மாமனிதனையே தேடுகின்றாள்
விலைமதிப்பில்லா பொக்கிஷமாய்
பெட்டகத்து பேழையென கவனமாய் பார்த்திருந்து
பசுமை காக்கும்
மனிதரைத் தேடி ஓடுகிறாள் வற்றாத ஜீவநதியோ
கொட்டும்
மழையருவியோ
வானளாவிய மரங்களோ
இலை கொடி செடிகளோ எவற்றையும் அதனதன் உரிமையிலே தலையிடா வண்ணம் மனிதர் தாம்
வாழ்ந்து வந்தால்
இயற்கை தான் சீறுவாளோ
பெருவெள்ளம் கொடுப்பாளோ ஆழிப்பேரலையாய் ஆட்டமிடுவாளோ
நாகரிகத்தின் உச்சவரம்பாம் நெகிழிக் குப்பை தனை ஒதுக்கியே வைத்திட்டு- இயற்கைக்கு
தீங்கான பொருள்தனையே தவிர்த்திட்டு
பாங்கான பாதை சென்று பொன்னான மண்ணை பக்குவமாய் காத்து நின்றால்
இயற்கையன்னை பூரிப்பாள் இதயமதை தந்திடுவாள்!!
-