உதவாத உயிரற்ற
பொருட்களை கூட
தூக்கியெறிய மனம்
வருவதில்லை பலருக்கு...
உதவிய உயிருள்ள
மனிதர்களை தூக்கி
வீச எப்படித்தான் மனம்
வருகிறதோ சிலருக்கு...!-
நிஜமா? நிழலா? எனும்
நிறப்பிரிகையை காட்டுகிறது ...
நிறம் மாறிக் கொண்டேயிருக்கும்
சில பச்சோந்தி உறவுகள்....!!!!-
பிணம் தின்னும்
கழுகொன்று அழுகிய
பிண்டமதை புசிக்க !
அறுவறுத்த புழுவாய்
ஊர்ந்து வந்து ஒட்டிக்
கொள்ளும் !
குணம்
மாறும் மனமாய் சில
மானிட பச்சோந்திகள் !-
நட்பாக பழகி
முதுகில் குத்தும்
முட்டாள் மனிதர்களை
மன்னிக்கும் பழக்கம்
புத்திசாலிகளுக்கு
இல்லை!
-
சில இடங்களில்,
சில நேரங்களில்,
சிலரிடம் மட்டும்,
பச்சோந்திகள் கூட
என்னிடம் தோற்றுப்போகும்..,
-
பச்சோந்திகள்
நிறம் மாறுமே
ஒழிய
ஒருபோதும்
குணம்
மாறுவதில்லை !
மனிதன்
மட்டும்
விதிவிலக்கு.-
நிறம் மாறும் பச்சோந்திகள் போல
சிலர் மனம் மாறுவார்,
பாம்பின் நஞ்சை விட கொடிய விஷம் அவர்களின் நாக்கு!
ஐந்தறிவு ஜீவன் பழிவாங்குவதில்லை,
ஆனால் ஆறறிவு மனிதன்
தேளைப்போல கொட்டுகிறான்!!-
வர்ணமற்ற வைரஸீக்கு
பச்சை வண்ணம்
பூசுகிறது காவி;
ஆதி சிவனை
அழைக்கிறது
பச்சை.
இவர்களின்
வர்ணத் தூற்றலில்
பச்சோந்தியும்
முதல்முறையாக
தன் பிறப்பிற்காய்
பெருமை
கொள்கிறது.
எந்நிறமும்
எம் நிறமென.-