என் மன குப்பைத்தொட்டிக்குள்
எத்தனை குப்பைகளை
வீசினாலும்
எனைசூழ்ந்து கொண்டிருப்பது
துரோகங்களே....
அப்படியிருக்க,
அஃறிணை போலான
என் இயல்புவாழ்க்கையில்
இதைபற்றி சொல்லுமளவிற்கு
என்ன இருக்கபோகிறது
சுவாரசியமாய்.-
யாரை அதிகம் நம்பினீர்களோ
அவர்களாலேயே அதிகம்
ஏமாற்றப்படுவீர்கள்!
யார் ஆயுள்முழுதும்
அருகிலிருப்பேன் என
சத்தியம் செய்தார்களோ
அவர்கள்தான் அரைநடுவில்
விட்டுச்செல்வார்கள்!
மனநிம்மதி
எவரால் கிடைக்குமென
நம்பியிருந்தீர்களோ
அவர்களால் தான்
மனது துகள்களாக்கப்படும் !
உனக்காக
எதுவும் செய்வேன்
என்றவர்கள்தான்
உன்னை விரைவாக
மறந்துவிடுவார்கள் !
இவற்றையெல்லாம்
புரிந்தும் புரியாமல்
புலம்பித் தவிக்கும்
வாழ்வே
விதியின் வழி
வாழ்வாகிறது !-
பிரியத்தின்
போர்வையில்
தெளிக்கப்படும்
அமிலத்தின் சாயல்(ங்)கள்...
து(கு)ரோக(த)த்தின்
செய்கைகளென்றுணரப்படும்
கணங்களில்....
எரிக்கப்படுவது
உண்மை நேசத்தை
சுமந்த நெஞ்சம் மட்டுமே!!!-
ஒரு காலத்தின்
கடுங்குளிரை
கடப்பதற்கு
ஆடைகளை
தயார்
செய்வதைப்போல...
நேசங்களின்
தாக்குதல்களை
எதிர்கொள்ளத் தான்
நான் இன்னும்
கற்றுத் தெரிந்திருக்கவில்லை
இல்லையேல்
கற்றதில் தேர்ந்திருக்கவில்லை!!!-
ஒரு
பெருந்துரோகத்தின்
பின்னர்
நேசத்தை
பற்றிக் கொள்பவர்களுக்கு
இதமாய்
குளிர்வதும் இல்லை
பதமாய்
தகிப்பதும் இல்லை-
அன்பினால் ஊதியூதி
ஏமாற்றங்களால்
உடைந்துடைந்து
அழுது கொண்டேயிருக்கிற
சின்னக்குழந்தை நான்....
நஞ்சால் உப்பியவர்களின்
கள்ள முகங்களை மட்டும்
ஒருபோதும் என்னால்
உடைக்கவே முடிவதில்லை.-
பிரியத்தை
போதிக்க வந்தவளுக்கு
துரோகத்தை
படிப்பினையாக்கியது
போலிநேசம்...
அன்று அவள்
முதுகிலிடப்பட்ட
தழும்புகள் ...
இன்று அவன்
முதுகில் வடுகளாய்..
சிறுய வேற்றுமை..
குத்தியது அவளல்ல!!!-
நடந்தேறிய
நெருங்கிய உறவொன்றின்
பெருந்துரோகத்தின்
கொடும்வலியால் ...
எவரையும்
நம்ப முடியாதவொரு
மனநிலை
உருவெடுப்பது மட்டுமன்றி
எதிர்நிற்கும் துரோகி
கூனி சகுனியைக் காட்டிலும்
பலம் பொருந்திய
பெருநரியெனினும்
துணிந்து கொல்லும்
திறனும் பலமடங்கு
உருவாகும் என்பதே....-