QUOTES ON #அகத்தின்_மணம்

#அகத்தின்_மணம் quotes

Trending | Latest
8 OCT 2018 AT 17:02

தாய்மாரறிந்தால் தலைதாழ்த்தும் களவு
காதலர்க்கண் நோக்கின்கலங்கும் கற்பு
பொருளுணரா மாதர்தம் அறியவொண்ணா களவு - ஆனால்
சங்கத்தில் செழித்த களவு
அகத்தில் புணர்ந்து வளர்ந்த களவு
முதுக்களைப் புரட்டிப் பார்த்த அணங்கு
நம்மந்தையர் போகித்துப் போற்றிய களவின்று
தாய்மாரறிந்தால் தலைக்கவிழும் களவானதேன்..?

-


8 JAN 2019 AT 19:04

வருடம் : 1920
தெருண்ட இல்லாளை எண்ணி கிழவன் கூற்று


பலயுகம் புதைந்த சிப்பிக்குள்
இன்று புதிதாய் காக்க
முத்து ஒன்று நுழைந்ததோ..?!

பலதிங்கள் மிளிர்ந்த தளிரிடம்
இன்று புதிதாய் போற்ற
மொட்டு ஒன்று விளைந்ததோ..?!

குழந்தையென கண்ட கிளியின்
குறுநகைக் குழிவில்
இன்று புதிதாய் மயக்க
வெட்கம் ஒன்று பிறந்ததோ..?!

-


8 NOV 2018 AT 23:50

நுகர்ந்து விளித்தர் மணமென்னவோவென -
மழை நீர் மண் புகுந்த மணமென்றேன்
துகிலகற்றி திகைத்தர் குறியென்னவோவென- பசித்த
பிள்ளை படுத்திய பாடென்றேன்

எள்ளி நகைத்தனர் சோர்வெதற்கோவென்று
இரவில் கண்ணுறங்கா கடலலையை கண்டு இளைத்தேனென்றேன்
விரகமென்றால் அல்லலென்று சிரித்தர் - மனமோ
பக்தியென்றால் புனிதமன்றோவென உரைத்தது


-


20 SEP 2018 AT 12:12

சிறுக்கோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கென தவிக்கும் வான் ;
காதல் சுமையேந்த உளைந்துத் துடிக்கும் புவி ;
இவ்வாறு, பூமியே காதலில் கலவரப்பட்டுக் கிடக்கையில், இவையனைத்தையும் பொருட்படுத்தாது, பேருந்தை எதிர்நோக்கும் விழிகள்;
பொதியைச் சுமக்கும் பேருந்து...

#மாநகரம்

-


2 JAN 2020 AT 21:33

தயங்கிய தோழி கண்டு தலைவி கூற்று...

-