Sometimes, unexpected miracles
happen in life.
Challenging times can lead to
Surprisingly good outcomes.
-
Writer by Passion
Photographer by Relaxation
Artist by recreation
~Enjoy... read more
ஒரே இரவில் காமத்தின்
மேலிருந்த என் வெறுப்பை
மாற்றி அதை புனிதமாகிய
என் காதல்தேவன் நீதான்-
கண்ணில் காணாத உன்னை
காலம் மறந்து - நித்தம்
கனவிலே காதல்செய்து
நான் காத்திருந்ததெல்லாம்..
உன்னில் தொலைந்து
போகத்தான்.-
காதல் ஒளி இல்லாத
என் இதயக்காட்டின் இரவில்
மின்மினி பூச்சியாக
மிளிர்ந்தவன் நீ..-
என் இரவுகளை
நீயே எடுத்துக்கொள்கிறாய்
என் பகல்களை
உன் நினைவுகள்
பறித்துக்கொள்கிறது
நான் என்ன செய்வது..?
என் இதயம் உன்னிடம்தானே உள்ளது.-
நீயில்லாமல்
தவிக்கும் - என்
தனிமை பொழுதுகளை
உன் நினைவுகளே
தத்தெடுத்துக் கொள்கின்றன.-
காலம் முழுவதும்-என்
காதல் பொழிந்து
கட்டிஅணைத்து
பார்த்துக்கொள்வேன்.
இறைவா.. 🙏
மறு பிறவி என்று ஒன்று இருந்தால்
ஒவ்வொரு பிறப்பிலும்-அவனை
என்னுடையவன் ஆக்கி விடு.
இல்லையேல்,
எங்களை படைக்காமலே இருந்து விடு.-
தூண்டிலாக நீ வந்தால்
அதில் ஏங்கி மாட்டிக்கொள்ளும்
மீனாக நான் இருப்பேன்.-
கரையாக ஈர்கிறாய்-பின்
கடலாக மாறி அணைக்கிறாய்.
நீ கடலா... இல்லை கரையா...
இதுதான் உன் காதல் லீலையா...?
கடலாகவும் நீ, கரையாகவும் நீ
உன்னையே தேடி வரும்
அலையாக நான்.-