தாகம் தீர்க்கும்
தென்னையும்
தாகத்தில் தவித்தது
அவள் அருகே நின்று
புன்னகைப் படம் எடுத்த போது.-
புகைப்படத்தில்
அவள் நிழல்
கோவத்தில்
முகம் திருப்பியது
நிஜத்தில் அவள்
ஜொலிக்க!!-
Waves,
one after another,
crossed rugged rocks,
turned themselves into foam
the face of a smile
resting at her feet,
like a penance in silence.-
உலக நன்மைக்கு
ஆனந்த நடனமாடிய
நடராஜர்,
தன் அடுத்த அடியை
ஆட முற்பட
அடியேன் முன்
அவள் நிற்க,
தன்னிலை மறந்து
உலோக சிலையாய்
நின்றார்.-
இருந்தும் இல்லாமல்
இருந்தார்கள்
இருவரும் உயிருடன்
உணர்வுகள் இல்லாமல்
உணர்தல் இல்லாமல்
உறவும் இல்லாமல்.
முழு நிலவாய்
பௌர்ணமி வர
எல்லாம் மாறிவிட்டது.-
இந்தியா
பாகிஸ்தான் இடையே
அமெரிக்காவுக்கு
எந்த பங்கும் இல்லை
என மோடி சொல்ல,
உக்ரைன்
முழுவதும் எங்களுடையது என
ரஷ்ய அதிபர் புட்டின் உரக்க சொல்ல,
இஸ்ரேலும் ஈரானும்
மாறிமாறி குண்டு மழை பொழிய,
ட்ராப் நோபல் பரிசுக்காக
காத்திருக்க,
நான் அவளுக்கு
என்ன எழுதலாம் என
யோசித்துக்கொண்டிருந்தேன்.-
As Modi declared
that the U.S. has no role
between India and Pakistan,
As President Putin claimed
that all of Ukraine belongs to them,
As Israel and Iran
took turns raining bombs,
And as the Trump waited
for the Nobel Peace Prize to drop,
There I was
wondering
what I could possibly write to her.
To remind her,
that I remember her,
that I think of her
so I inked this.-
பார்க்க முடியும்
என்ற
எண்ணத்தில்
காத்திருந்தேன்
பார்க்க முடியாது
என்று
தெரிந்தபின்னும்
காத்திருக்கிறேன்
பார்க்க முடியும்
என்ற
நம்பிக்கையில்
நான், உன்னை.-