26 JUL 2017 AT 1:00

உன் கண் சிறையில் கைதியாகிவிட
தொடர்கிறது என் குற்றங்கள்.
சொகுசாய் வாழ ஐந்து செல்கள் வேண்டாம்,
ஒருசெல் நீதர உயிர் பெற்றுத் தருவேன்!
காவலுக்கு காக்கியொன்றும் வேண்டாம்,
கைகளால் அனைத்து முத்தங்கள் பதித்திடு போதும்!
ஓருடையும் அற்ற தண்டனைக்கு
சீறுடை என்ன அவசியமா?
விடுதலையாகும் எண்ணம் இல்லை
குற்றங்களில் பங்கேற்பாயா?
இருவரும் அகப்படும் சிறையொன்றில்
ஆயுட்கால தண்டனை,
தொடங்குவோமா நம் தவறுகளை!

- Karunyaa Hariharan