ஆடி காற்றிலும் அசைந்திடா
விழுதுடைய ஆல மரத்தின் வேர்!-
Javaphile☕
Black lover🖤
Budding Chemist 👩🔬
Writing is my passion✍️
Scribbled th... read more
கார்முகிலோடு
காதல் கொண்டு
காதோரம் கவிபாடும்
கற்றை கூந்தல்
கவிதை ஆனது!-
கதைகளாக கதைப்பவள் அவள்
கண்களில் வித்தை செய்பவன் அவன்
அவளின் புரிதலும்
அவனின் புணர்தலும்
அவர்களின் காதலியம்❤️-
உன் பொய்களையும்
நடிப்புகளையும்
இத்துடன் நிறுத்திக் கொள்;
இல்லையேல் சீறும் நதியில்
இல்லாமல் போய் விடும்.-
பாட்டனுக்கே
பூட்டன் பேரன் வந்தாலும்
காலா காலத்திற்கும்
கனி முதிர்ந்த சோலை போல்
கம்பீரம் மட்டும் பேசப்படும்!-
அவ்வளவே வாழ்வு
ஆசை தீரா நெருடல்
இம்சையின் இன்னல்
ஈன்றெடுத்த இன்பம்
உயிரின் உளவியல்
ஊக்கமாக ஊமைகொள்ள
எதிர்மறையான எழுச்சியோடு
ஏன் எதற்கு என எண்ணி
ஐம்பூத துணையோடு
ஒளி ஒழி ஒப்பீட்டு
ஓடிடும் ஓடை நீரில்
ஔதாரியம் ஓங்கிட
அவ்வளவே வாழ்வு!-
ஈரைந்து மாதம் சுமந்து
ஈரேழு ஜென்ம பந்தம்
மடியில் தவழ்ந்து
மண்டியிட்டு நடந்து
மண்ணில் ஓடி ஆடும்
தன்னுயிர் தன்னில் இருந்து
முளை நிலை தொடங்கி
பருவ நிலை போல உருமாறி
தாயின் கருவிலும்
தந்தையின் நிழலிலும்
மகிழ்ந்து மலரும்!-
Oh! Lanterns..!
Symbolises the hope and fortune,
Dispells the spell of darkness
in the shell of snails signifies tolerance.
**Full poem in caption**-