அவள் கண்ணீர் கைக்குட்டையில் கரைந்தது
அவன் கண்ணீர் காகிதத்தில்
புதைந்தது!-
Instagram :balajiiip
'அவள்' மூன்றெழுத்தினுள் வடித்த
கவிதை
'அவள்' முப்பால் மறந்த
அதிகாரம்
'அவள்' யாரும் துறந்த
அறிவியல்
'அவள்' யாழ் மீட்டா
இசை
'அவள்' தூரிகை தீட்டா
ஓவியம்
'அவள்' காரிகை சேரா
காவியம
'அவள்' இலக்கணம் செய்யா
மொழி
'அவள்' இருவர் சொல்லா
காதல்
'அவள்' அவன் கனவுகளில்
உயிர்த்தவள்
'அவள்' அவன் கவி சொல்லும்
கண்ணம்மா!
-
ஒற்றை வரியில் தொடங்கினேன்
உன்னை எழுத
ஒற்றை வார்த்தை தேடினேன்
உன் நகை சொல்ல
ஒற்றை திங்கள் கழித்தேன்
உன்னை வகை செய்ய
ஒற்றை காதல் கொண்டேன்
உன் மடி சாய
ஏனோ,
ஒற்றை ஜென்மம் பொய்க் கண்டேன்
நான் கொண்ட உன் தாகம் தீர!-
மயிர்க்கால்கள் பூ செறிக்கவில்லை
வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கவில்லை
உலகம் தலைகீழே சுற்றவில்லை
ஊரெங்கும் உன் முகம் தெரியவில்லை
இரவு தூக்கம் தவறவில்லை
இளையராஜா பாடல் கேட்கவில்லை
தனிமைநேரம் கசக்கவில்லை
தானே சிரிக்கும் பழக்கமில்லை
அறிகுறிகள் சொல்ல இதென்ன கொடும் நோயா?
மையிட்ட கண்களில் மறுநொடி மரணம்
_காதல்!
-
உண்மைகள் சொல்ல உணர்வுகள் ஏ௩்குதடி
உறக்கத்தில் கூட உன் முகம் தீண்டுதடி
தனிமையில் நின்றும் உன் நிழல் தோன்றுதடி
தலைமுடி கோதிட உன் விரல் கேட்குதடி
என் கண்கள் இரண்டும் உன் விழி தேடுதடி
உன் குரல் கேட்க என் செவி மய௩்குதடி
இது காதல் என்று சொல்ல முத்தமிழும் வியக்குதடி
இத்தனை இருந்தும் உன் நட்பு என்னை மாய்க்குதடி கண்மணியே!-
மேகங்கள் கலைந்து போகும்
மோகங்கள் மாறி விடும்
தூரங்கள் குறைந்து போகும்
துயரங்கள் ஓடி விடும்
கண்ணீரும் வற்றி போகும்
காதலும் கடந்து விடும்!
-
I see scars beneath the smooth skin left behind by her kisses
I see tear marks from the last night's memory shower
I see eyes that were sleep deprived for no time I remember
I see her smiling and waving at me for the one last time
The truth is I see a broken mirror,but that was actually me shattered!-