அனிதா ரூபன்   (அனிதா ரூபன்)
298 Followers · 28 Following

read more
Joined 21 May 2019


read more
Joined 21 May 2019

வெகு சிலருக்கே இருக்கும்
அரிதான நற்குணங்களை
கொண்டவர்களின்
நிறைகளை சொல்லி சொல்லி
மெய் சிலிர்க்காவிட்டாலும்
அவர்களின் சிறு சிறு
குறைகளை
வாய்ப்பு கிடைக்கும்
பொழுதெல்லாம்
குத்திக் காட்டாதீர்கள்...

-



உலகமே நானென்று கர்வபடாதே....
உலகத்தில் நீயும் சிறுதுளி...!
உனக்காகவும் காற்று நிரம்பியுள்ளது
காற்றெல்லாம் உனதில்லை...!

-



என் எதிர்பார்ப்புகளை
எல்லாம் பூர்த்தி செய்ய
காத்துக்கிடக்கும்
அற்புத விளக்கின் பூதமாய்
நீ......
இருந்தும் ஏங்குகிறேன்;
கேட்டு பெறுவதை விட
நீ என்னை புரிந்து
தந்துவிடமாட்டாயா? யென்று
என்ன செய்வது
பூதத்தால்;
கேட்க்கும் வரமே
தர இயலும்.....
எப்படியோ வரம் கிடைத்தால்
சரி என்றாகி விட தான்
புத்தி சொல்கிறது
மனம் எங்கே கேட்கிறது.

-




இருந்தும் வருத்தத்தால்
மௌனம் கலையா
இரவை;
ஒருபோதும் கடந்துவிடாதீர்கள்
பின்பு அதுவே
பழகிவிடும்....

-



ஏக்கம் நிறைந்த
வாழ்க்கை இது...!
சுடர் ஏற்றுபவருக்காக
காத்திருந்து
விளக்கு திரியென
திரியாதே...!
உன்னுள் இருக்கும்
சிக்கி முக்கி கல்லை
கண்டெடு.... வெளிச்சத்தை
கண்டிடு....!

-



எதிர்பார்ப்புகள் எல்லாம்
ஏமாற்றம் ஆகிவிடுவதால்,
ஏமாற்றத்தையே எதிர்பார்க்க
துவங்கி விட்டேன்..
குறைந்த பட்சம்
ஏற்றுக் கொள்ளும்
பக்குவமாது வரக்கூடும்...!

-



உலகமே நானென்று
கர்வபடாதே...
உலகத்தில் நீயும்
ஒரு சிறு துளி...!
உனக்காகவும் காற்று
நிரம்பி உள்ளது
காற்றெல்லாம் உனதில்லை....
அரியணை விரிப்பனாலும்
அடிப்பிடி துணியானாலும்
நீ வந்த தரியினை மறவாதே..!

-


25 JUL 2020 AT 23:54

கோவப்பட எவ்வளவு
காரணம் இருந்தாலும்
பொறுத்து போனேன்;
இன்றோ....
காரணமின்றி கோபித்து
கொள்கிறேன்....
என் மனதில் இருக்கும்
உன்னை பற்றிய பிம்பம்
வெறும் கற்பனையான
எதிரொலியாக இருக்கலாம்....
அதற்காக;
நியாமற்ற என் கோபத்தை
ஒருபோதும் நியாயப்படுத்த
விரும்பவில்லை....
மாறாக
காரணம் தேடி அலைகிறேன்
தொலைத்த என் காதலை
கண்டறிய....!!!

-


25 JUL 2020 AT 21:36

நாம்...
மறக்க நினைக்கும்
நினைவுகள்
தரும் வலியும்;
மறைந்து போகும்...
மறந்த நினைவுகளாக;
காலம்
அதை
மாற்றும் போது....!

-


20 JUL 2020 AT 19:41

மனதில் இருப்பதை
கொட்டி தீர்த்தால்- எல்லாம்
சரியாகிவிடும் என்பவர்களுக்கு
எப்படி சொல்வேன்....?
கண்ணீரை ஒட்டுமொத்தமாக
கொள்ளையடித்த
என் வேதனை......
இன்று;
ஆயுள் கைதியாகிவிட்டது
மௌனத்திடமென்று....
சொல்ல தவிர்க்கும்
வேதனையை அல்ல
அதன் வீரியத்தை விவரிக்கவே
வார்த்தைகள் தயங்குகிறது....

-


Fetching அனிதா ரூபன் Quotes