என்ன செய்வேன் நான்....
வான்நிலவு மறையும் நேரத்தில்
உம் பிறை முகம் காணது ஏக்கம் எனை வாட்டும் போது?
காண்கின்ற கனவெல்லாம் உமதாயிருக்க,
ஏக்கம் தீறாமல் கூடுகிறது ஏனோ...
நிற்காமல் ஓடும் மணித்துளிகளை
உம் எண்ணத்தில் கடக்கிறேன் தினம்.
எங்கு, எதில் சென்று தேடுவேன் நான்?
உம் புன்னகை தரும் அந்த பேரின்பத்தை...
உம்முடன் பேசிய தருணங்கள்!
அவை காட்சிகளாய் கண்ணில் நிற்க,
வேறெதுவும் பார்க்கும் விருப்பம் இல்லை.
எப்படி சொல்வேன் நான்?
வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்வுகளை...
எழுத்துக்கள் மொழிக்குறியது,
சொற்கள் எனக்குறியது,
இவ்வரிகள் அனைத்தும் உமக்குறியது.
ஆம், கவிதைகளால் சொல்கிறேன்,
என் கவிதையே உமை மீண்டும் காணும் வரை.
வேறென்ன கேட்பேன் நான்?
உம் நினைவில் ஒரு ஓரம் என் பெயர் மட்டும் போதும்...
தூரம் கனக்கிறது நேரம் நகர்கிறது,
உம் முகம் அது என்னில் இருக்க,
எப்படி முடியும் உம்மை மறதியிலும் மறக்க...!
-