சிரிப்பை மட்டுமே காட்டி
சிலிர்க்க வைத்தாய் என்னை!!!
கோபம் கொள்ளும் வேளையிலும்
என் கண் நனைய நீ அழுதாய்!!!
களைப்பேதுமின்றி கால்கடக்க
என்னோடு பயணம் கொண்டாய்!!!
விடுமுறை ஏதுமின்றி சலிக்காமல்
எனை நித்தமும் நினைத்திருந்தாய்!!!
பிடித்ததை அறிந்து மறக்காத பல
தருணங்கள் தந்தாய்!!!
எல்லாம் இருந்தும் ஒரு நாள்
தனியே தவிக்க விட்டுச் சென்றாய்!!!
மறக்க முடியா உன் நினைவவுகளோடு
இன்னும் வாழ்கிறேன்
வேரொருவரின் மனைவியாக
-
எழுதாத காவியமாய்
என் நெஞ்சில் ஒரு ஓவியமாய்
உளியாக நீ செதுக்கிய
உயிரோட்ட ஓர் சிலையாய்
தழுவாமல் தழுவிய காதலை
அந்த இறைவன்
எழுதாமல் போனதேனோ!!!-
விலகி இருந்து கடந்த நாளை
வீடு திரும்பியதும்
நீ வாரியனைத்து இடும்
ஓராயிரம் முத்தங்கள்
சொல்லிவிடும்
நம் காதலின் ஆழத்தை
அது இன்றும் அழியாத
நினைவுகளாய் என்
நெஞ்சினோரம்!!!-
பழயன ஒழிந்து
புதியன புகுந்து
தீமைகள் அழிந்து
புதுமைகள் வழிந்து
வெடித்திடும் வேட்டில்
புன்னகை பூக்க
இனிய தீபாவளி
நல்வாழ்த்துக்கள்-
நுறை ததும்பிய அலைகளின் புன்னகையில் அடித்து சென்றது
என் காலடி மணல் மட்டுமல்ல
நான் தேக்கி வைத்திருந்த கண்ணீரும் தான்-
இனிமை பொங்க
வளமை செழிக்க
ஒற்றுமை ஓங்க
வெறுமை நீங்க
தித்திக்கும் தீபாவளிக்கு
என் திகட்டாத வாழ்த்துக்கள்-
இலைகளின் மேலே பனித்துளியாய்
நீ என் வாழ்வில் வந்தாய் முழு நிலவாய்
இரவின் மடியில் பௌர்ணமியாய்
நீ என் உயிரில் உறங்கும் வெண்பனியாய்
என கவிகள் ஆயிரம் தோன்றுதடி
நீ என் கண்ணெதிரே வந்து நிற்கையிலே!
-