கூடுகட்ட மரமும் இல்ல கூடிவாழ உறவும் இல்ல கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமை இங்கே காணலையே கண்ணீரு விடுவதைத் தவிர வேற எண்ணம் தோணலையே தாகம் தீர்க்க தண்ணீரும் இல்ல பசியப் போக்க தானியமும் இல்ல ஒத்தையில நிக்குறேனே உதவிக்கு யாரும் இல்ல என் கதி தான் உங்களுக்கும் எண்ணித் தான் பாத்துக்கோங்க இயற்கையை தான் காத்திடுங்க சூதானமா தான் பொழைச்சுக்கோங்க...