எனக்கு நம்பிக்கையில்லைதான்
எல்லோருமே சொல்கிறார்கள்
துளிருமென்று
இப்படியொரு அவநம்பிக்கைக்கு
துணை போவது வருத்தம்தான்
அன்பானவர்களின் நம்பிக்கையை
புறக்கணிப்பதில் விரும்பவில்லை
என்செய்வேன்
சில சமயம் அவர்களே மறந்தாலும்
என்னையறியாமலே
இது ஒரு இன்றியமையா கடமையாகிவிட்டது
காய்ந்த செடிக்குத்தான்
இன்னும்
நீரூற்றிக் கொண்டிருக்கிறேன்
நீங்களும் நம்புங்கள்
நிச்சயம் ஒரு நாள் துளிரும்
-