Suresh Murugesan   (✍️ Suresh Murugesan❤️)
64 Followers · 50 Following

read more
Joined 16 June 2021


read more
Joined 16 June 2021
25 APR AT 10:25

தாங்கி நின்ற தூணும் சரிந்து விழ
தடுமாறும் கட்டிடம்
என்றோ ஒருநாள் நிச்சயம் உடையும்
உடையும் வலியை விட
உயிர் ஊசலாடும் வலி அதிகம்
நீயற்ற நான்
தூண் இல்லா கட்டிடம்
தாங்கி நிற்க நீ இல்லாமல்
தடுமாறி நிற்கிறேன்
தடுமாறினாலும்
தடம் மாறாது உன் வளர்ப்பு
அத்துணை கண்டிப்பு
அவ்வளவு கோபங்கள்
இத்துனையும் எனை செதுக்கவே
என்பதை புரிந்துணர காலம் தந்த பிரிவு ஈடில்லா இழப்பு...!!!
என் பெயரின் பின்னால்
உன் பெயரையும் சேர்த்து சுமப்பதை தவிர
ஒன்றும் செய்யா முடியா பயனற்றவன் நான்....!
சுரேஷ் முருகேசன் ....💔🥺

-


22 APR AT 8:23

உழைப்பு சுரண்டல்
கரையான் கட்டிய வீட்டில்
புகுந்த அரவம் (பாம்பு)
உழைத்தவன் ஒதுங்க
ஒதுங்க வந்தவன் 
ஒய்யாரமாய் குடி கொண்டான்
சுவர் எழுப்பியவன் பெயர் தெரிந்தும்
சூழ்ந்தவன் பெயரே சூட்டப்படுகிறது
ஆம் அதன் பெயர்
பாம்பு புற்றாம்...!!!

இது தான் உழைப்புச் சுரண்டலா....??
இனி கரையான் புற்றில் வாழும்
பாம்பென சொல்லுங்கள்....!!

-


19 APR AT 7:40

மறவாமல் பணநாயக கடமை ஆற்றிடுங்கள்...!

வாக்குக்கு பணம் வாங்குபவர்களுக்கு
விலைமாதுவை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது...?
என் பார்வையில் அவளும் நீயும் ஒன்றே
இருவரும் காசுக்கு விலைபோகிறவர்கள் தானே...?

வெல்லட்டும் பணநாயகம்....!!!

-


15 APR AT 13:03

குரைக்கும் நாயின் இரைச்சல் கேட்டு
காதுகளை பொத்திக் கொண்டதால்
கூவும் குயிலின் இனிமையை கேட்க மறந்தேன்
குரைப்பது குரைக்கட்டும்
கூவுவது கூவட்டும்
வேண்டியதை கேட்டுக்கொள்கிறேன்....!!!

-


14 APR AT 23:13

துன்பங்களை எல்லாம்
வார்த்தைகளால்
விவரிக்காத போதும்
குரல் வழியே என் 
குழப்பங்களை அறிந்து
ஆறுதல் சொல்லும்
நட்பெல்லாம் கிடைப்பது
உண்மையில் வரம் தான்...!!

-


10 APR AT 10:45

ஒவ்வொரு முறையும்
எங்கிருந்தோ வரும் அம்மாவின் குரல், "சுவத்துல போய் இடிச்சுக்கப் போற” என்று என்னை வெளியே இழுக்கும்.

இன்று அந்தக் குரல் இல்லை.
பல சுவர்களில் நான் முட்டி மோதிக் கொண்டிருக்கிறேன்.

- ✍️Na. Muthukumar❤️

-


8 APR AT 15:54

உணவில்
அறுசுவை மட்டுமே தேடியவன்
அன்பை தேடும் நிலை தான்
வாழ்க்கை தந்த பாடம்....!!!💔
சுவையில்லையெனினும்
எங்காவது ஒரு ஓரத்தில்
அன்பு நிறைந்திருக்கிறதா என்ற தேடல்...!!!
பலமுறை தோல்வி
இனி வெற்றிகள் ஏதுமில்லை
இழக்ககூடாதவர்களை இழந்த பின்
எங்கோ எதையோ தேடுவதில்
நியாயம் என்ன....???

-


1 APR AT 0:31

எனை வீழ்த்துவதற்கும் உடைப்பதற்கும்
பேராயுதம் 
ஏதும் தேட வேண்டாம்
அவ்வளவு கடினமானவன் இல்லை நான்
அன்பென வேடம் போட்டு - பின்
உண்மை முகம் காட்டுங்கள்
அதுவே போதுமான ஆயுதம்
எனை வீழ்த்துவதற்கு....!!!

-


21 MAR AT 10:09

கவிஞன்
பூவையும் நாரையும் தொடுத்து
பூமாலையாக்கியது போல்
கவிஞனின்
கடந்தகால நிகழ்வுகள் சில
கற்பனைகள் பல
இரண்டையும் தொடுத்து
எழுத்துகளை வார்த்தைகளாக்கி
வார்த்தைகளை வரிகளாக்கி
வரிகளை கவிதையாக்கி
தம் கற்பனையை வழங்கும்
கவிஞனின் வரிகள் சில
வாசிக்கும் போது வலி கொடுக்கும்
கவிஞனின் வரிகள் பல
வாழ்க்கைக்கு வழி கொடுக்கும்..!
பூவோடு நாறும் மணந்தது போல
கவியோடு கற்பனையும் இனித்தது...!

-


20 MAR AT 19:39

எழுதுகோல் பிடித்து
எழுத தடுமாறும்
மழலையின் அத்தனை கிறுக்கல்களும்
ஓவியமே...!
ரவிவர்மனும் வரையா சிறந்த ஓவியம்
நீ எழுதிய கிறுக்கல்...!
இசைராஜவும் இசைக்க முடியா சிறந்த இசை
உனது குரல்....❤️🎶🎶🎵

-


Fetching Suresh Murugesan Quotes