என்னுடன் நீ இருக்கும் நாட்களில் உனக்கு புரியாதவை என்னை பிரிந்திருக்கும் நாட்களில் உனக்கு புரியும் அனைத்தையும் நீ இழந்து விட்டாய் என்பது புரியும் ஆனால் நான் உன்னில் இருப்பதை மட்டும் புரிந்து கொள்வாயா?
உன்னை பெற்றெடுத்த தாயிக்கு பெருமையையும்... உன்னை வளர்த்த தந்தைக்கு வெற்றியையும்... உன்னால் கிடைக்க வேண்டும் என்று இந்நாளில் உன்னை வாழ்த்துகிறேன்... உன்னிடம் நான் எதிர் பார்ப்பது ஒன்று தான் அது உன் அன்பு மட்டும் தான்... உன் வாழ்க்கையில் துன்பம் என்னும் இருள் நீங்கி இன்பம் என்னும் சந்தோசம் மட்டும் உன்னில் தங்கட்டும் என்றெல்லாம் நான் சொல்ல வில்லை... ஏனென்றால் இவை இரண்டும் இல்லாத வாழ்க்கை எவருக்குமில்லை... ஆகையால் இதில் எது உன் வாழ்க்கையில் வந்தாலும் அதை சரிபாதியாக எடுத்து கொண்டு வாழ்க்கையை நீ ஜெயிக்க வேண்டும்.... ஒவ்வொரு நொடியும் உன் வாழ்க்கையில் வெற்றிக்காக போராடு உன்னுடன் பழகிய நாட்களில் உன் மனம் கோணும்படியாக நடந்திருந்தால் உன் பிறந்த நாளான இன்று என்னை மன்னித்துவிடு தோழியே...