Dharma  
0 Followers · 1 Following

Joined 26 March 2024


Joined 26 March 2024
1 MAY AT 23:07

வண்ண வண்ணப்பூக்கள் எல்லாம்,
உன் கருங்கூந்தலில்,
வாசம் கொள்கிறது,
வாடதா மலராக.

வஞ்சியின் கூந்தலிலே,
வசித்து விடலாம் என்று,
வட்டமேசை மாநாடு போடுகிறது,
வாழ்நாள் முழுவதும்,
வண்ண வண்ணப்பூக்கள் எல்லாம்...
-கவி தர்மா.ஆ...

-


30 APR AT 22:59

உழைப்பாளர் தினம்.
ஒய்வின்றி உழைத்து,
உன் ஆசைகளை மறைத்து,
வியர்வை துளியை,
வெளிகாட்டமால்,
உழைக்கும் உழைப்பாளியே..

உண்ணுவதற்கும் நேரமில்லை,
ஓய்வு எடுக்கவும் நேரமில்லை.
உழைப்பாளியே நீ இல்லையேல்,
உலகில் ஒன்றும் அசையாது..

உழைப்பவனும்,
உயரே இருப்பவனும்,
ஓன்று தான் என்பதை,
உணருபவன் தான்,
உயிருள்ள மனிதன்...

உலகிலுள்ள அனைத்து தொழிலாளர்கள் அனைவருக்கும்
என் உள்ளம் கனிந்த தொழிலாளர்
தின நல் வாழ்த்துக்கள்..
-கவி தர்மா.ஆ...

-


29 APR AT 22:41

இதயம்.
என் இதயத்தில்,
இருந்து கூட உன்னை,
வெளியேற்றி விட்டேன் ஆனால்,
என் இமைகளில் இருந்து,
உன்னை வெளியேற்ற
முடியவில்லை.

இதயம் மறந்தாலும்,
இமைகளால் மறக்க
முடியவில்லை..

நீ இருந்த இதயம்,
வலுவிழந்து விட்டது,
உன்னை கண்ட கண்கள்,
பலம் பெற்று விட்டது...
-கவி தர்மா.ஆ...






-


28 APR AT 1:14

இந்த நொடி கூட நேசிக்கிறேன்,
உன்னை நான்,
நெருங்கி வாழ,
முடியவில்லையே என்று,
நிதமும் தவிக்கிறேன்..
நீ விட்டு போன,
மூச்சு காற்றுடன்,
என் மூச்சு காற்றும்,
இனைந்து இந்த நொடி வரை,
இனைப்பிரியாமல் வாழ்கிறது...
-கவி தர்மா.ஆ...

-


26 APR AT 16:20

அவன் பார்வை,
என் மீது தான்,
என்று எனக்கும் தெரியும்.

ஏனோ தெரியவில்லை,
எதிர் எதிர் இருந்தும்,
பேச முடியல..

காதல் தான் என்பதை,
உணர்ந்தோம்,
கண்களால் இனைந்தோம்,
காதலர்களாய்...
- கவி தர்மா.ஆ...

-


24 APR AT 23:11

காதல் என்ற ஆயுதம் தான்,
சிலரை காயப்படுத்தவும் செய்கிறது,
கல்லறையிலும் விடுகிறது..

காதல் கரை இல்லாத,
காட்டாறு போன்றது,
கால் தடம் பதிக்கமால்,
கடந்து வந்தவர்கள்,
எவரும் இல்ல...
- கவி தர்மா.ஆ...




-


22 APR AT 0:41

தேய்வதும் வளர்வதும்,
நிலவு மட்டுமல்ல,
உன் நினைவும் தான்..

உன்னை சுற்றியே வரும்,
என் நினைவை,
ஒரு முறையாவது நினைத்து பார்!
நிரந்தரமாய் உறங்கட்டும்,
என் நினைவுகளாவது...
-கவி தர்மா.ஆ...


-


21 APR AT 0:55

வறுமையை விரட்டி விட்டு,
வாழ்க்கையை திரும்பி,
பார்த்தால்..
இளைஞரின் வாழ்க்கையே,
இருளில் முழ்கி விடுகிறது...
-கவி தர்மா.ஆ...




-


19 APR AT 23:07

அன்புள்ள என்று,
ஆரம்பித்து,
இப்படிக்கு என்று முடித்து,
ஈரம் நிறைந்த நிலம் போலவும்,
உலகமே தடுத்தாலும்,
ஊரடங்கு போட்டாலும்,
எந்த சூழ்நிலையானலும்,
ஏணியாக மாறுவேன்,
ஐயம் கொள்ளாதே,
ஒரு மனதாக முடிவு செய்து,
ஓற்றுமையுடன் வாழ்வோம்,
ஔவையின் மொழி போல,
ஃகனம் எஃகனம் சேர்ந்தே,
வாழ்க்கை முழுவதும் வாழ்வோம்...
-கவி தர்மா.ஆ...


-


19 APR AT 0:29

சிறை.
சிறையில் இருக்கவே ஆசை,
அது எத்தனை ஆண்டுகள்,
ஆனாலும் சரி,
உன் இதயசிறையாக,
இருந்தால் மட்டும்...

துடிக்கும் இதயமும்,
தூங்காத விழிகளும்,
நீங்காத உன்,
நினைவுகளுடன் தான்...
-கவி தர்மா.ஆ...













-


Fetching Dharma Quotes