நம்பிக்கை ஒன்றை உன்வசம் வைத்திருந்தால் அவ்வப்போது பல அவமானங்களும் , பன்மடங்கு அவச்சொல்லும் உம்மை சொந்தமாக்கி கொள்ளும். கலையும் போது களைத்து விடாதே ...!
நீங்கள் அளித்த இரத்த வாடை ஏனோ இன்றளவும் இல்லை . எனினும் , இன்னும் கசிந்து கொண்டிருக்கும் நினைவு வாடையை எங்கணம் அழிப்பீர் ? படுகொலையால் படுகுழியான முள்ளி வாய்க்காலில் இன்னும் எம்முயிர்கள் பூத்துக்கொண்டு தான் இருக்கின்றன வாடை இப்போது மண(ன)மாய் வீசி வருகிறது காற்றில் .....!
அவளின் கடைசி நிராகரிப்பும் , முதல் நேசமும் நானாக இருக்க வேண்டும் . அவ்வளவு தான் இதைவிட இவ்வுலகில் இனி என்ன பெற வேண்டும் ? ஆயுளானவளே எம்மூச்சை சுவாசிக்கட்டும் ....!
என் மேனி எங்கும் இரத்தவாடை ! சீல் வடிந்து சிதையும் இதயத்தில் இன்னமும் கொஞ்சம் பசபசக்கிறது , மௌனத்தால் துளைத்த அவள் அம்புகளின் ஈரம் ! இப்படி சிதைக்கத்தான், இவ்வளவு நாள் மூச்சடைத்து நின்றாயா தங்கப்பொண்ணே ....!
தீண்டாமை அழித்து புணர்தலை புனிதமாக காக்கும் தெய்வங்கள் மத்தியில் , புதிய தலைமுறை நாகரிகம் நிகழ்த்திவிட்டு நகர்ந்து செ(சொ)ல்கிறது 'Just for a passion' என்று.....!