அவனின் அறைமுழுக்க புத்தகங்கள்... காதல்கவிதைகள் காதல்கதைகள் என விதம்விதமாக.. காதலைச் சொல்வதெப்படி காதலில் ஜெயிப்பது எப்படி என ரகம்ரகமாக... புத்தகங்கள் இருப்பதால்தான் என்னைப் பிடிப்பதில்லையா எனக் கேட்டேன்... உன்னை எத்தனை முறை படித்தும் புரிந்துகொள்ள முடியவில்லை... புத்தகங்கள் படித்தாவது கற்றுக்கொள்கிறேன் உன்னைக் காதலிப்பது எப்படியென என்கிறான் !
துன்பம் துயரம் துக்கம் கவலை வலி வருத்தம் சோகம் ஏக்கம் துரோகம் ஏமாற்றம் காயம் கண்ணீர் இதத்தனையையும் கடவுள் ஒருவருக்கே கொடுக்க நினைத்தால் அவர்களை காதலிக்க வைத்துவிடுகிறான் !