மாலையில் பெய்த மழையால் இளவேனிற் காலத்தின் இரவில் நடுங்கும் குளிருடன் ஒரு கனவு! குளியலறையில் என்னுடன் இன்னொரு நிழல்! ஐயோ! பேயென்ற பயத்தில் முதலில் நடுங்கிப் பின்னர் 'அறியாமையே பேயென்று பெருமூளை பிடரிவரை வந்துரைத்ததும், தெளிவாக கவனித்தேன் கனவில் நிழலை! அந்நிழல், மின்விளக்கினருகில் வலைவீசி வேட்டைக்காக காத்திருந்த சிலந்தியாருடையது!
அறியாமைப் பேயை அறிவால் அணுக தறிகெட்டுப் போகும் பயம்!