அருகே அவள் முகம் தெரியும் தருணம்,
மனமோ துள்ளி குதிக்கும்.
சேர்ந்து நடக்கையில் விரல்கள் இடித்து,
ஸ்வரங்கள் புதிதாய் பிறக்கும்.
நீளும் பாதையில், அவளின் தடங்களை,
தொடர உள்ளம் விருப்பும்.
அவள் பாத சுவடுகள் சேர்த்து, அழகிய
சிலையாய் அகத்தில் தானே வார்க்கும்.
வெட்கத்தில் விலகி, விலகயில் விரும்பி,
அவளின் விழியோ திரும்பி பார்க்கும்.
அந்த கணத்தில் ஆயிரம் மின்னல் தாக்கும்.
பேச முனைகயில், திக்கி திணறி,
விக்கி தொண்டை அடைக்கும்.
விக்கும் போதும் அவளின் அழகில்
சொக்கி தானே தவிக்கும்.
நாடி துடிப்பில், அவளின் பெயரோ
விட்டு விட்டு ஒலிக்கும்.
அந்த ஒலியின் அலையில், அவளின் விழிகள்
அத்தனை கதைகள் பேசும்.
புருவத்தை உயர்த்தி, கோபத்தில் முறைத்து
அவளும் பார்க்கும் நேரம்,
ஆயுதமின்றி உள்ளுக்குள்ளே ஒரு குட்டி
போரே வெடிக்கும்.
-