புன்னகை பூத்திடும் உன் பூவிதழுக்குள்
மறைந்திருக்கும் பாரம் தான் என்னவோ
உன் விழி வீச்சில் வீழ்ந்திடும்
வீரர்களின் வீரம் தான் என்னவோ
நீ கைவீசி நடந்திட
காற்றும் புயலாய் மாறியதென்னவோ
அங்கும் இங்கும் அலைமோதும்
உன் விழிகளுக்கிடையே
சிக்கித்தவிக்கும்
என் விழியின் நிலை தான் பரிதாபமோ
-