நீட்டிய கரத்தில் எதைக்
குவிகிறதிந்த மழைத்துளிகள்...
முதல் சொட்டிலெழுந்த சில்லிப்பு
உயிர் வரையில் ஊடுருவி உறங்கி
கிடந்த உற்சாகத்தையெல்லாம்
உடலெங்கும் பரவிட செய்து...
அழுத்தி கிடந்த பாரமெல்லாம்
கரைந்தோடி காணாமற் செய்திட
எதை நிரப்புகிறதிந்த மாயத்துளிகள்...
எதுவொன்றுமில்லாத நிர்மலமான
பிறந்த குழந்தையாக்கிட மனதை...!
-