வரிசையாக அடுக்கப்பட்ட தொட்டிச்செடிகளில்
பார்வையை பதித்த விழிகளில் பதிய
மறந்த மேடுபள்ளங்களின் பரிசளிப்பில்...
பாத்துமா விழுந்துடப்போறயென்ற அக்கறைக்கு
மெல்லிய புன்னகையில் நன்றி உதிர துவங்க...
செவியோரம் ஒலித்த குரல் இங்க அப்படி தான்
அக்கறையும் இருக்கும் ஆப்பும் இருக்கும்...
இதற்கும் கூட அதே ஒற்றை புன்னகை...
யாரோ ஒருவருக்கு யாரோ ஒருவரின்
அக்கறை ஆப்பாக மாறிய பின்பு...
யாரும் யாரோடும் பகிரும் அக்கறையெல்லாம்
ஆப்பாக பார்க்கப்படுவதில் என்ன
நியாயம் இருந்திடக்கூடும்...?
ஒரு பானை சோற்றுக்கு வேண்டுமானால்
ஒரு சோறு பதமாக இருக்கலாம்...!
ஆனால் மனிதர்களுக்கு...?
-