ஓய்ந்த பின்பு ஓய்வெடுக்கும்
துளிகளை துளிர்க்க நினைக்கும்
மனதிற்கு தெரிகிறது அது ஆசையென்று...
தடைப்பட்ட உரையாடல் மௌனத்தின்
பிடியில் மாட்டிக்கொண்ட பின்பு
அவதானிக்கும் புரிதலை வேண்டும்
மனதிற்கு தெரியுமது எதிர்பார்ப்பென்று...
என்னவென்றே தெரியாமல் அங்குல
அங்குலமாய் முன்னேறும் அந்த
வசியத்திற்கு பெயர் தான்
என்னவென்று தெரிவதில்லை மனதிற்கு...
அதை தடுக்கும் வழியும் கூட...!
-