நான் மரித்து விட்டேன் கூட வாழ்ந்தமைக்காக கூடி நின்று ஒரு சொட்டு கண்ணீர் சிந்தி விட்டு சவக் காலைக்கு எனது வெற்றுடலை தூக்கிச் சென்று சிதையில் ஏற்றி பந்தம் பிடித்து குடம் உடைத்து எரித்து சாம்பலாக்கி அருவியோரம் அஸ்தி கரைக்கும் என்னவனே நானின்றி தவிக்கும் என் நிழல் என்னைத் தேடி எங்கெல்லாம் அலைகிறதோ முடிந்தால் அதனை கண்டறிந்து ஓரிரண்டு ஆறுதல் வார்த்தை கூறிவிடும் உன்னை விட என்னோடு அதிகம் வாழ்ந்த நிழல் மனதிற்கு ஓர் ஆறுதல் இளைப்பாறல் கிடைக்கட்டும்!!!!