எனக்கு அவனை பிடிக்கவில்லை
அவனுக்கும் என்னைக் கண்டால் பயம்
வரும்வரை காத்திருப்பான்
வந்தவுடன் ஓடி யொழிவான்..
அழைக்க மாட்டேனா என தவிப்பான்
அருகில் அமரத் துடிப்பான்..
அனைத்தும் அறிந்தும் மௌனிப்பேன்
ஓருநாள் வெளியூர் பயணம்
ஏனோ அன்று அவனைக் காண
வாசல்வரை வந்து திரும்பி பார்த்து
வா..!என்பதுபோல் தலையசைத்தேன்...
அதுவரை அடக்கி வைத்த பிரியத்தை
எல்லாம் என் கன்னத்தை ஈரப்படுத்தி
தீர்த்துக்கொண்டான்...!!!
நன்றியுள்ள தோழன்
-