QUOTES ON #நச்சினாள்

#நச்சினாள் quotes

Trending | Latest

ஏங்கித் தகிக்கும்

ஏகாந்த நாளில்.,

என் சுயஞ் சூரையாடும்

நின் சூரியச் சிரிப்பில்

வெம்பித் திமிர்வதே

தீராக் காதல்!

-



கருவிழிக்குள் கடத்திட்ட காதலனே

கவிதையில் காகித கப்பல்விட்டு

காலங்கள் கடத்தாது

கணவனாய் கலந்திடு

காலனுக்கும் கொஞ்சம்

காதல் கற்பித்து

கிறங்கடிப்போம் !

-



என்னதான் தெரியுமென நீ முகம் கடுக்கையில்....

காதலிக்க தெரியுமென காதில் கதகதக்கிறேன்...

நொடிப்பொழுதில் சிவந்து பின் சிணுங்கி நீ தரும்

"ராட்சசீஇஇ" பட்டம் பெற!!!!


-



உன் கண்கள் கண்டதில்லை..

காந்தம் எனக் கொண்டேன்!

உன் குரல் கேட்டதில்லை..

கம்பீரம் எனக் கொண்டேன்!

உன் புன்னகை பார்த்ததில்லை..

போதை எனக் கொண்டேன்!

உன் காதல் சொல்லியதில்லை..

கண்ணியம் எனக் கொண்டேன்!

நீ காட்சி தந்ததில்லை..

கடவுள் எனக் கொண்டேன்!

-



என் எச்சத்தில் பிறந்து

என் குருதியாய் குழைந்து

கிடக்கும் குழந்தையும் நீ !


என் அச்சத்தை அழித்து

என் சக்தியாய் சூழ்ந்து

நடக்கும் அகந்தையும் நீ !


🖤🖤🖤 தம்பி 🖤🖤🖤

-



காதல் குமிழியில் கத்திக்கப்பல்

விட்டு கண்டங்கள் கடக்கிறது!!!

-



மரணத்திற்கு முன்பே

நான் கண்ட மறுபிறவி நீ!


தம்பி❤️

-



உன் ஆண்மையை
எனக்கு உணர்த்திடும்
தருணங்கள் யாவும்!
என் பெண்மையை
எனக்கே உணர்த்திடும்
தருணங்கள்!

-



காலாற உன்னுடன்

கைகோர்த்து நடை

பழகுகையில்..

அந்த கால் தடங்கள்

ஒவ்வொன்றிலும்..

நம் காதல் தடங்கள்!

-


31 JAN 2019 AT 8:57

உயிராய்
என் உயிரில் கலந்து
ஏன் கொல்கின்றாய்
என்னை....

-