Veera Manimuthu 7 SEP 2018 AT 4:34 என்றன் மயிர்த்தோட்ட நெஞ்சில் உழுதிடும்உன்றன் இருஏர் உதடு! - Jayanthi Murugan 22 JUL 2018 AT 0:59 மரத்தை அகற்றும் மனிதன் அவனுடையமண்டையில் மூட்டைபோல் மண். - Venkatesh 14 OCT 2020 AT 5:15 ஞாலத்தின் பசிதீர்ப்பார் தகைஓர்ந்ததற் பின்செப்புககாலத்தின் நிற்கும் வகை. - Jayanthi Murugan 8 JUL 2018 AT 14:24 கற்றலில் வேகம் பெருமையே எப்போதுமதனை கற்பித்த வர்க்கு. - Jayanthi Murugan 11 JUL 2018 AT 20:25 விவசாயி துன்பம் துடைத்து மகிழ்வித்தால்பெய்யென பெய்யும் மழை. - Venkatesh 10 APR 2021 AT 10:19 வல்உழவும் நல்உளமும் மிகுக்க உளப்படும் மல்உலகும் மாண்டற் சிறந்து. - Veera Manimuthu 8 SEP 2018 AT 18:24 பறவையாய் நீயும் பறந்திடக் கூண்டின் திறவுகோ லுன்றன் நகை! - Venkatesh 13 AUG 2020 AT 18:21 பண்ணூறும் கவிதன் சொல்லூறும் வாய்த்தபொருளூறும் மதிதன் உழன்று. - Veera Manimuthu 7 SEP 2018 AT 23:18 தயக்கம் விலக்கித் துணிவைக் கொடுத்துமயக்கம் அளிக்கும் உதடு! - Jayanthi Murugan 20 JUL 2018 AT 0:56 தான்தீனி திங்கத் தரணியைக் காலியாக்கும்கள்வர் இருப்பது இங்கு. -