QUOTES ON #குறள்வெண்பா

#குறள்வெண்பா quotes

Trending | Latest
7 SEP 2018 AT 4:34

என்றன் மயிர்த்தோட்ட நெஞ்சில் உழுதிடும்
உன்றன் இருஏர் உதடு!

-


22 JUL 2018 AT 0:59

மரத்தை அகற்றும் மனிதன் அவனுடைய
மண்டையில் மூட்டைபோல் மண்.

-


14 OCT 2020 AT 5:15

ஞாலத்தின் பசிதீர்ப்பார் தகைஓர்ந்ததற் பின்செப்புக
காலத்தின் நிற்கும் வகை.

-


8 JUL 2018 AT 14:24

கற்றலில் வேகம் பெருமையே எப்போ
துமதனை கற்பித்த வர்க்கு.

-


11 JUL 2018 AT 20:25

விவசாயி துன்பம் துடைத்து மகிழ்வித்தால்
பெய்யென பெய்யும் மழை.

-


10 APR 2021 AT 10:19

வல்உழவும் நல்உளமும் மிகுக்க உளப்படும்
மல்உலகும் மாண்டற் சிறந்து.

-


8 SEP 2018 AT 18:24

பறவையாய் நீயும் பறந்திடக் கூண்டின்
திறவுகோ லுன்றன் நகை!

-


13 AUG 2020 AT 18:21

பண்ணூறும் கவிதன் சொல்லூறும் வாய்த்த
பொருளூறும் மதிதன் உழன்று.

-


7 SEP 2018 AT 23:18

தயக்கம் விலக்கித் துணிவைக் கொடுத்து
மயக்கம் அளிக்கும் உதடு!

-


20 JUL 2018 AT 0:56

தான்தீனி திங்கத் தரணியைக் காலியாக்கும்
கள்வர் இருப்பது இங்கு.

-