மேகப் பந்தலுக்குள்
ஒளிந்து புன்னகைக்கும்
அவ் ஒற்றை ஒளிச் சுடர்...
அட்சதை தூவும் தென்றல்
அதனோடு கமழும் பூ வாசம்..
நம்மோடு சேர்ந்து ஊர்வலம்
செல்ல காத்திருக்கும் நீரலைகள்..
இயற்கையின் தலைமையில்
காதல் கலந்து இசைபாடும்
மரம் செடி கொடிகள்...
உருவமறியா இவ்வுலகமறியா
நம் உணர்வுகளால் மட்டுமே
கைகோர்த்து உறவாகிட
வரம் ஒன்றை கேட்கிறேன்...
கனவிலேனும் கணவனாகிடு
என் உயிருமானவனே!
-