தனக்கு வேண்டிய பதிலை சாதகமாக்கி தரும் மௌனம்... எனக்கு மட்டும் ஏனோ கேள்வியாகவே நீடிக்கிறது... உணர்வுகளால் பூட்டப்பட்டிருப்பதாய் நான் உணரும் அதை உடைக்கவோ ஊகிக்கவோ மனமில்லாமல்...!
விளக்க கூட முடியாத உணர்விற்கு என்ன பெயர் வைப்பது?... ஏதோ ஒரு பெயரை வைத்து அதற்குள் அதை அடைத்து வைத்து... இது தான் அது இப்படித்தான் இருக்க வேண்டும் அது என்று வரையறுப்பதை விடவும்... அது விளக்க முடியாத ஏதோ ஒன்றாகவே இருந்து விட்டு போகட்டுமே...!