அது இல்லத்தரசியின் வெகுமதி...!!
ஆழ்ந்த உறக்கம் களைக்கப்படும் வேளையில்,
அன்பின் வார்த்தைகள் தேங்கி நிற்கும் வேளையில்,
மனமுவந்த பாராடிற்கு ஏங்கி நிற்கும் வேளையில்,
விரும்பிய தொலைக்காட்சி நிகழ்ச்சியை காணமுடியா வேளையில்,
வீட்டுச் சுமைகள் பாரமாகும் வேளையில்,
அவளின் ஆசைகளுக்கு தீர்வின்றிப் போகையில் ,
இழப்பின் வலியை
வெகுமதியாக
ஏந்தி நிற்கிறாள்...!!
- Kavinila Radha.
-