எழுத்துகள் உயிரற்று சிதறி கிடக்க,
அவளின் பளிங்கு முகம் என் ஆழ்மனதில் தோன்ற,
என் கண்கள் அவளின் கண்களுடன் உறவாட,
கண்கள் காதல் பாடம் கற்க,
நான் தன்னிலை மறந்து எழுதுகோலில் எழுத்துகள் உயிர் பெற செய்து உயிர் எழுத்து படைத்தேன்,
சட்டென ஓர் மெல்லிய இசை ஒலிக்க என் கனவு கலைய,
கண்கள் திறந்த பொழுது உண்மை நிலை அறிந்தேன்,
என் அலைபேசி சிணுங்க நான் முணுமுணுத்து கொண்டே அதை அமர்த்தினேன்,
பின்னர் நான் மீண்டும் சிந்தனையில் ஆழ என் முன் மீண்டும் தோன்றினாள், அப்பொழுது நான் அவளுக்கு துணையாக இருப்பேன் என்று என்னுள் உறுதிமொழி பூண்டேன்,
அவ்வாறு உதித்தது தான் மெய் எழுத்து,
படாரென என் அறையின் கதவு திறக்கும் ஓசை கேட்டு நான் நினைவு திரும்ப,
என் கண்முன் அவள் ஓர் அழகிய தேவதையாய் தோன்றினாள்,
நான் அவள் கரங்களை பற்றி நெற்றியில் திலகம் இட என்னவள் ஆனாள் அவள்,
நான் அவளின் துணையோடு வாழ்க்கை பயணம் தொடங்கிய பொழுது உருவானது உயிர்மெய் எழுத்து........
-